வீங்கிய முகம்... குவைத் தீ விபத்தில் மகனை டாட்டூவால் அடையாளம் கண்ட தந்தை
குவைத்தில் 49 பேர்களை பலிகொண்ட தீ விபத்தில் சிக்கிய இளைஞரை அடையாளம் காணும் பொருட்டு மருத்துவமனை சென்ற தந்தை ஒருவரின் அனுபவம் வெளியாகியுள்ளது.
தந்தையும் மகனும்
கேரள மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீஹரி ஜூன் 5ம் திகதி குவைத் வந்துள்ளார். தந்தையும் மகனும் ஒரே நிறுவனத்திலேயே பணி புரிந்தும் வந்துள்ளனர். கடந்த 8 ஆண்டுகளாக ஸ்ரீஹரியின் தந்தை பிரதீப் குவைத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் தீவிபத்தை அடுத்து அதிகாரிகளிடம் இருந்து பிரதீபுக்கு தகவல் வந்துள்ளது. தமது மகனை அடையாளம் காணும் பொருட்டு மருத்துவமனை சென்ற பிரதீப், அடையாளம் காண முடியாமல் முதலில் திணறியுள்ளார்.
டாட்டுவால் அடையாளம்
ஆனால் தமது மகனின் கையில் குத்தப்பட்டிருந்த டாட்டுவால் பிரதீப் அடையாளம் கண்டுள்ளார். ஸ்ரீஹரி குவைத்துக்கு சென்ற ஒரு வாரத்தில் அவரது மரண செய்தி வெளியாகி குடும்பத்தாரை உலுக்கியுள்ளது.
தீ விபத்து நடந்த கட்டிடத்தில் 40 இந்தியர்கள் உட்பட 49 வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்துள்ளனர். இதில் 50 பேர்கள் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 195 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வசிக்கும் ஏழு மாடி கட்டிடத்தின் சமையலறையில் இருந்தே தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |