பெற்ற மகனை கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூர தந்தை! பிரபல நாட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
இத்தாலியில் 7 வயது மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தையை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இத்தாலியின் Morazzone நகரில் வசித்து வருபவர் Davide Paitoni(40). இவருக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் Davide Paitoni மற்றும் அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ள நிலையில் ஒரு கட்டத்தில் அவருடையை மனைவி காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து இருவருக்கும் விவாகரத்தும் வழங்கப்பட்டுள்ளது. அப்போது Davide தனது மகன் என்னுடன் இருக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
அதன்படி Davide உடன் அவரது மகன் வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து Davide Paitoni வீட்டிற்கு வந்தவுடன் அவரது மகனை கத்தியால் குத்தி கொலை செய்து அலமாரியில் பூட்டி வைத்துள்ளார்.
அதன் பிறகு மனைவி வீட்டிற்கு சென்று அவரையும் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். மேலும் சம்பவ இடத்தை விட்டு Davide Paitoni தப்பி சென்றுள்ளார். இதையடுத்து இத்தாலி காவல்துறையினர் தப்பியோடிய Davide-டை கையும் களவுமாக பிடித்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதற்கிடையே 7 வயது சிறுவனின் தாத்தா, தந்தையுடன் செல்ல மாட்டேன் என்று அடம்பிடித்த சிறுவனை நான் தான் சமாதானம் செய்து அனுப்பி வைத்தேன் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.