பிரித்தானியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு அச்சம்... சுயநலமாக செயல்படும் சாரதிகள்: வெளியாகியுள்ள காட்சிகள்
பிரித்தானியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு குறித்து அச்சம் வேண்டாம், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்தும், மக்கள் அச்சம் காரணமாக சுயநலத்துடன் செயல்படுவதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவில் கனரக வாகன சாரதிகள் பற்றாக்குறை காரணமாக பெட்ரோல் மற்றும் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
சில பெட்ரோல் நிலையங்கள் வாடிக்கையாளர் ஒருவருக்கு 30 பவுண்டுகள் மதிப்பிலான பெட்ரோலை மட்டுமே வழக்குகின்றன.
ஆனால், தாங்களே பெட்ரோல் நிரப்பிக்கொள்ளும் வசதியுள்ள மற்ற இடங்களில், பலரும் கேன்களில் பெட்ரோலை நிரப்புவதை வெளியாகியுள்ள புகைப்படங்களில் காணலாம்.
அவர்கள் நீண்ட நேரமாக கேன்களில் பெட்ரோலை நிரப்ப, மற்றவர்கள் பெட்ரோல் போடும் இடத்தை நெருங்கவே மணிக்கணக்காக காத்திருக்கும் சூழல் பல இடங்களில் காணப்படுகிறது.
கனரக வாகன சாரதிகள் தட்டுப்பாட்டால், பெட்ரோல் முதல் உணவுப்பொருட்கள் வரை கொண்டு வர ட்ரக்குகள் இல்லாததால், பல பல்பொருள் அங்காடிகளில் ஷெல்ஃப்கள் காலியாக காணப்படுகின்றன, முக்கிய உப பொருட்கள் வராததால் உணவகங்களும் மதுபான விடுதிகளும் கூட பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.