அரச குடும்பத்தினரின் குழந்தைகள் படிக்கும் பள்ளி - கட்டணம் எவ்வளவு தெரியுமா?
உலக அரச குடும்பத்தினரின் குழந்தைகள் படிக்கும், உலகில் அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ராஜாக்களின் பள்ளி
பெரும்பாலான நாடுகளில், அரசு பள்ளிகளில் இலவச அல்லது குறைந்த கல்வி கிடைத்தாலும், சிலர் தரத்திற்காக தங்கள் குழந்தைகளை கூடுதல் கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள்.
ஆனால், பெரும்பாலான பணக்காரர்கள் கூட இந்த பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்க்க யோசிப்பார்கள். அந்த அளவிற்கு இந்த பள்ளிக்கட்டணம் உள்ளது.
இந்த பள்ளியில், உலக மன்னர் குடும்பங்களின் வாரிசுகளும், பரம்பரை பணக்காரர்களின் வாரிசுகள் மட்டுமே படிக்கிறார்கள்.
இதன் காரணமாக சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள இன்ஸ்டிட்யூட் லு ரோசி என்ற இந்த பள்ளிக் கூடம் ராஜாக்களின் பள்ளி என அழைக்கப்படுகிறது.
இங்கு, ஈரான், பெல்ஜியம், எகிப்து, கிரீக் போன்ற பல்வேறு நாடுகளின் மன்னர்கள் மற்றும் பரம்பரை பில்லியனர்களான ரோத்ஸ் சைல்ட், ராக் ஃபெல்லர் போன்றோரின் குடும்பத்தினரும் இந்த பள்ளியில் பயின்றவர்கள்.
ஆண்டு கட்டணம்
இந்த பள்ளி 1880 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டு கட்டணமாக ரூ.1.10 கோடி வசூலிக்கப்படுகிறது.
இந்த பள்ளி சுவிட்சர்லாந்து நகரத்தில் அமைந்து இருந்தாலும், குளிர்கால வளாகம், சாலெட் என்னும் அழகிய கிராமத்தில் செயல்படுகிறது.
இங்கு கல்வியை தாண்டி ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் கைகளை பேண்ட் பாக்கெட்டில் நுழைத்துக்கொண்டே பேசுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், குதிரையேற்றம், மலை பனிச்சறுக்கு, ஃபென்சிங் மற்றும் ஸ்கை டைவிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இங்கு உண்டு.
பிறருக்கு மதிப்பளிப்பது, சுய மரியாதை, சவால்களைச் சந்திக்கும் மன வலிமை, நட்பு, ஒற்றுமை ஆகியவையும் பள்ளி கற்பிக்கும் பிரதான அம்சங்கள்.
இவ்வளவு வசதிகள் அடங்கிய இந்த பள்ளியில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை சராசரியாக 400 ஆக உள்ளது. 2 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில், பள்ளியில் மொத்தம் 200 ஆசிரியர்கள் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |