அபுதாபி மைதானத்தில் வேலிக்குள் அமர்ந்த படி போட்டியை கண்டுகளித்த ரசிகர்கள்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் அபுதாபி மைதானத்தில் ரசிகர்களுக்காக வேலிக்குள் அமர்ந்த படி போட்டியை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இணையத்தில் வைரலாகியுள்ளது.
2020 இந்தியாவில் நடைபெற வேண்டிய டி20 உலகக் கோப்பை தொடர், கொரோனா காரணமாக 2021 ஒத்திவைக்கப்பட்டது, அதுமட்டுமின்றி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது.
அக்டோபர் 17ம் திகதி தொடங்கிய டி20 உலகக் கோப்பையின் தகுதிச்சுற்று நேற்றுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், இன்று அபு தாபியில் தொடங்கிய ‘சூப்பர் 12’ சுற்றின் முதல் போட்டியில் ‘குரூப் 1’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது.
அதன் படி முதலில் பேட்டிங் செய்து வரும் தென் ஆப்பிரிக்க அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில், ரசிகர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்த படி போட்டியை கண்டுகளிக்கும் வகையில் அபுதாபி மைதானத்தில் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதாவது, மைதானத்தில் சில பகுதிகளில் உள்ள புல் தரையில் இடைவெளி விட்டு வேலி அமைக்கப்பட்டு அதற்குள் ரசிகர்கள் அமர்ந்த படி போட்டியை காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் ரசிகர்கள் குடும்பத்துடன் பாதுகாப்பாக அமர்ந்து போட்டி கண்டு ரசித்து வருகிறார்கள்.
அபுதாபி மைதானத்தில் கட்டம் கட்டமாக வேலிகள் அமைப்பட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
ரசிகர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாட்டை பலர் பாராட்டி வருகின்றனர்.