FIFA கால்பந்து உலக கோப்பை! கத்தாருக்கு தமிழகத்தில் இருந்து செல்லும் 1.5 கோடி முட்டைகள்
உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு வழங்குவதற்காக தமிழகத்தில் இருந்து 1.5 கோடி முட்டைகள் கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
தமிழகத்தில் இருந்து கத்தாருக்கு செல்லும் முட்டைகள்
இதுதொடர்பாக முட்டை ஏற்றுமதியாளரும், நாமக்கல் கால்நடை வளர்ப்பு மற்றும் பண்ணை உரிமையாளர்கள் வர்த்தக சங்கத்தின் பொதுச் செயலாளருமான டாக்டர் பி.வி.செந்தில் கூறுகையில், நாமக்கல் மண்டலத்தில் 1,100 கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கிருந்து அதிகளவில் முட்டை ஏற்றுமதியாகும் நாடுகளில் கத்தாரும் ஒன்று.
16:9clue on Flick
முட்டையின் தேவை அதிகரிப்பு
தற்போது, அங்கு உலக கோப்பை கால்பந்து திருவிழா நடைபெறுவதால், அங்கு உணவுப் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக முட்டையின் தேவை அதிகரித்துள்ளது.
இதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கத்தாருக்கு 1.50 கோடி முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
qatarday