கத்தார் உலகக்கோப்பை நகருக்கு அருகே பாரிய தீ விபத்து! வெளியான புகைப்படங்கள்
கத்தாரின் உலகக்கோப்பை நகரில் உள்ள ரசிகர் கிராமத்திற்கு அருகே பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ரசிகர் கிராமம்
கத்தாரின் லுசைல் நகரில் ரசிகர்கள் தங்குவதற்காக தற்காலிக கிராமம் அமைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான கூடாரங்களைக் கொண்ட இந்த கிராமத்தில் ரசிகர்கள் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் ரசிகர் கிராமத்திற்கு அருகே உள்ள கட்டிடத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டது. லுசைல் மைதானத்தில் இருந்து இரண்டு மைல் தொலைவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உயிர்சேதம் இல்லை
கட்டுமானத்தில் இருந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், பாதுகாப்பு படையினர் எந்த எந்தவித காயமும் இன்றி தீயை கட்டுப்படுத்தியதாகவும், தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தினால் வானத்தில் கரும் புகைமூட்டம் எழுந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ரசிகர் கிராமத்தில் இரண்டு படுக்கைகள் கொண்ட சுமார் 1,800 கூடாரங்கள் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.