உக்ரைன் வான்வெளியில் வெடித்துச் சிதறிய நெருப்பு கோளம்: நாசா மறுப்பால் வெடித்த சர்ச்சை
உக்ரைன் வான் வெ:ளியில் வெடித்துச் சிதறிய நெருப்பு கோளம் RHESSI செயற்கைக்கோள் என்ற வாதத்தை நாசா மொத்தமாக மறுத்துள்ளது.
திடீரென்று தோன்றிய மர்ம பொருள்
குறித்த சம்பவம் தொடர்பாக வெளியான காணொளியில் உக்ரைன் தலைநகரில் திடீரென்று தோன்றிய மர்ம பொருள் ஒன்று சில நிமிடங்களில் நெருப்பு கோளமாக வெடித்துச் சிதறியுள்ளது.
Credit: Twitter
தலைநகரின் வான்வெளியில் மர்ம பொருள் தோன்றியதும், வான் தாக்குதல் தொடர்பான எச்சரிக்கைகள் நகரம் முழுவதும் விடுக்கப்பட்டது. ஆனால், RHESSI செயற்கைக்கோள் தொடர்பில் அறிந்திருந்த மக்கள், 21 ஆண்டுகளுக்கு பின்னர் கட்டுப்பாட்டை இழந்து பூமியில் விழுகிறதா என அச்சத்தில் தடுமாறியுள்ளனர்.
இதே தகவலை கீவ் நகர அதிகாரிகளும் உறுதி செய்ததுடன், உக்ரைன் வான்வெளியில் நெருப்பு கோளமாக வெடித்துச் சிதறியது RHESSI செயற்கைக்கோள் என தெரிவித்துள்ளனர்.
இதனிடையே நாசா அதிகாரிகள் வெளியிட்ட தகவலில், RHESSI செயற்கைக்கோள் உறுதியாக அதன் வட்டப்பாதையில் நிறுத்தப்பட்டுள்ளது என விளக்கமளித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு நெருப்பு கோளம் ஒன்று உக்ரைன் தலைநகர் மீது தோன்றியுள்ளது.
Credit: Twitter
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அது RHESSI செயற்கைக்கோள் கட்டுப்பாட்டை இழந்து 21 ஆண்டுகளுக்கு பின்னர் பூமியில் விழ இருக்கிறது என தெரியவந்தது.
RHESSI செயற்கைக்கோள்
ஆனால், ரஷ்யா தொடர்பில் சந்தேகம் எழுந்ததால், வான் தாக்குதல் எச்சரிக்கையும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி விடுக்கப்பட்டது. இந்த நிலையில் தான் உக்ரைன் விமானப்படையும் அது RHESSI செயற்கைக்கோள் தான் என்பதை உறுதி செய்துள்ளது.
கடந்த 2002ல் சூரிய கதிர்கள் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக RHESSI செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது. அதன் ஆயுட்காலம் 16 ஆண்டுகள் என்றே அப்போது கூறப்பட்டது.
Credit: Twitter
ஆனால் தற்போதும் அந்த செயற்கைக்கோள் செயற்பாட்டில் இருப்பதாகவும் அனால் தொலைத்தொடர்பு ஏற்படுத்துவதில் சிக்கல் இருப்பதாகவும் நாசா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.