அபுதாபி விமான நிலையத்தில் டிரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல்!
அபுதாபி விமான நிலையத்தில் டிரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தாக்குதல் புதிதாக கட்டுமான பணி நடைபெற்று வரும் பகுதியிலே நடைபெற்றுள்ளது.
டிரோன் தாக்குதலில் விமான நிலையத்தில் உள்ள 3 எரிபொருள் டேங்கர்கள் சேதம் அடைந்துள்ளது.
குறித்த தாக்குதலுக்கு ஏமனை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் குழு பொறுப்பேற்றுள்ளதாக தகவலில் கூறப்பட்டுள்ளது.
மேலும் குறித்த தாக்குதலால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Footage from 4 hours ago in #AbuDhabi, #UAE from Snapchat shows a large plume of smoke rising from the area near the reported attack. Footage was taken from https://t.co/TX9XEzHluv pic.twitter.com/9mWdgXRUMW
— Aurora Intel (@AuroraIntel) January 17, 2022