தாலிபான்கள் ஆட்சியை பிடித்த பின் காபூலில் நடந்த முதல் கிரிக்கெட் போட்டி! தேசிய அணி வீரர்கள் பங்கேற்பு... ஆச்சரிய புகைப்படங்கள்
தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின் முதல் கிரிக்கெட் போட்டி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் காபூலில் நடைபெற்றுள்ளது.
அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்த திட்டமிட்டு உள்ள நிலையில் அதற்கு பயிற்சி மேற்கொள்ளும் விதமாக ஆட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் பீஸ் டிபண்டர்ஸ் மற்றும் பீஸ் ஹீரோஸ் அணிகள் மோதின. இதில் ஆப்கானிஸ்தான் தேசியை அணியை சேர்ந்த பிரபல வீரர்களும் கலந்து கொண்டு விளையாடினார்கள்.
யாரும் எதிர்பார்க்காத நிலையில் மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பலரும் ஆப்கானிஸ்தான் தேசிய கொடியையும், தாலிபான்கள் கொடியையும் கையில் ஏந்தியிருந்ததை காண முடிந்தது.
இது தேசிய ஒற்றுமையை காட்டுவதாக விளையாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாலிபான்கள் நாட்டை கைப்பற்றிய பிறகு கிரிக்கெட் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படுமா என கேள்வி எழுந்த நிலையிலேயே அதற்கு பதில் கிடைக்கும் வகையில் இப்போட்டி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.