முதல் முறையாக பைசர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் மரணம்! எதனால் தெரியுமா? வெளியான முக்கிய அறிவிப்பு
நியூசிலாந்தில் பைசர் தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர் மிகவும் அரிதான பக்க விளைவுகளால் உயிரிழந்திருப்பது, அங்கிருக்கும் பலருக்கும் ஒரு வித பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸிற்கு எதிராக, பைசர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அமெரிக்கா நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தடுப்பூசி உலகளவில் மிகவும் பாதுகாப்பானது என கூறப்படுகிறது.
குறிப்பாக, இந்த தடுப்பூசியால் பக்க விளைவு மிக மிகக்குறைவு என்பதால் வளர்ந்த நாடுகள், தங்களுடைய நாட்டு மக்களுக்கு பைசர் தடுப்பூசியை கொள்முதல் செய்து செலுத்தி வருகின்றன.
அதன் படி நியூசிலாந்தும் பைசர் தடுப்பூசியை தங்கள் நாட்டு மக்களுக்கு செலுத்தி வருகிறது. இந்நிலையில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்ட பெண் ஒருவர் உடல்நலம் குன்றி திடீரென உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து நியூசிலாந்தின் கொரோனா தடுப்பூசி கண்காணிப்பு வாரியம் விசாரணை மேற்கொண்டது. அந்த அறிக்கையில், அந்த பெண் இதயத் தசைகள் வீக்கம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக கருதுவதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதயத் தசைகள் வீக்கத்தால் ரத்த ஓட்டம் மற்றும் இதயத் துடிப்பில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
இதன்மூலம் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர் பக்க விளைவு காரணமாக முதன்முறையாக உயிரிழந்துள்ளார் என நியூசிலாந்து சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், அந்த பெண் யார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை.