கர்ப்பிணிகள் குழந்தைகளுக்கு முன்னுரிமை... மத்திய கிழக்கிலிருந்து ஜேர்மனி வந்துள்ள முதல் விமானம்
ஈரான் போரைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகள் தத்தம் குடிமக்களை மத்திய கிழக்கிலிருந்து மீட்டுக்கொண்டுவரும் நடவடிக்கைகளைத் துவக்கியுள்ளன.
மத்திய கிழக்கிலிருந்து ஜேர்மனி வந்துள்ள முதல் விமானம்
இந்நிலையில், ஓமான் நாட்டிலிருந்த ஜேர்மன் குடிமக்களை ஏற்றிக்கொண்டு Lufthansa நிறுவன விமானம் ஒன்று ஜேர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

எத்தனை பேர் ஓமானிலிருந்து அழைத்துவரப்பட்டார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை என்றாலும், அந்த விமானம் 279 பேரை ஏற்றிச் செல்லும் வசதி கொண்டது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Johann Wadephul, மத்திய கிழக்கிலிருந்து ஜேர்மன் குடிமக்களை மீட்டு வரும் நடவடிக்கையில், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அவர்கள் முதலில் அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |