14 ஆண்டுகள் கழித்து முதல் இரவு நேர சேவை: பிரஸ்ஸல்ஸ்-பெர்லின் இடையே நேரடி ரயில்
பிரஸ்ஸல்ஸ் மற்றும் பெர்லினை இணைக்கும் முதல் இரவு ரயில் சேவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
டச்சு-பெல்ஜிய ரயில்வே நிறுவனமான European Sleeper, பெல்ஜியத்தின் தலைநகரம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்தின் தாயகமான பிரஸ்ஸல்ஸ் (Brussels) நகரத்திற்கும் ஜேர்மன் தலைநகர் பெர்லினுக்கும் (Berlin) இடையே ஒரே இரவில் பயணிக்கக்கூடிய ஒரு நேரடி இரவு நேர ரயில் சேவையை இந்த வாரம் தொடங்கியுள்ளது.
இதுபோன்ற நேரடி இரவு ரயில் சேவையின் மூலம் ஐரோப்பாவில் விமானப் பயணத்தால் ஏற்படும் மாசுவை குறைக்கும் குறைக்க உதவுவதே European Sleeper-ன் நோக்கம் என கூறப்படுகிறது.
reuters
]2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு, கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு, இரு தலைநகரங்களுக்கு இடையே இயக்கப்படும் முதல் இரவு நேர நேரடி சேவை இதுவாகும்.
இந்த சேவையின் முதல் பயணம் வெள்ளிக்கிழமை இரவு 7:22 மணிக்கு (1722 GMT) பிரஸ்ஸல்ஸில் இருந்து புறப்பட்டு சனிக்கிழமை காலை 8:01 மணிக்கு (0601 GMT) பேர்லினை வந்தடைந்தது.
reuters
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பேர்லின் மற்றும் பிரஸ்ஸல்ஸ் இடையே முதல் நேரடி ஸ்லீப்பர் ரயிலை அறிமுகப்படுத்திய இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஸ்டார்ட்அப் ரயில்வே நிறுவனமான European Sleeper பயணிகளுக்கு ரயிலில் ஷாம்பெயின் வழங்கியது.
2021-ல் அமைக்கப்பட்ட European Sleeper-ன் முதல் இரவுப் பாதை இது. 2024-ஆம் ஆண்டில் டிரெஸ்டன் மற்றும் ப்ராக் வரை ரயில்வே விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.
reuters
ஆம்ஸ்டர்டாமில் இருந்து பார்சிலோனாவிற்கு இரவு சேவை ரயிலையும் திட்டமிட்டுள்ளது, இது 2025-ஆம் ஆண்டு வசந்த காலத்தில் தொடங்கப்படவுள்ளது. மேலும் சில பாதைகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
reuters