உலகையே அச்சுறுத்தி வரும் டெல்டா கொரோனா எப்படி இருக்கும்? முதன் முறையாக புகைப்படங்கள் வெளியீடு
உலகையே அச்சுறுத்தி வரும் டெல்டா கொரோனா மாறுபாட்டின் புகைப்படங்கள் முதன் முறையாக வெளியிடப்பட்டுள்ளன.
2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது வரை உலகை அச்சுறுத்தி வருகிறது.
தொடர்ந்து கொரோனா வைரஸின் மாறுபாடுகள் புதிது புதிதாக உருவாகி மரணங்களை ஏற்படுத்தியது.
கடந்த சில மாதங்களாக உலகளவில் குறைந்த வந்த தொற்று, தற்போது குறைந்த தடுப்பூசி கொண்ட நாடுகளில் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது.
இந்நிலையில், கொரோனா மாறுபாடுகளில் ஒன்றான டெல்டாவின் புகைப்படங்கள் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளன.
எலக்ட்ரான் நுண்ணோக்கியில் தெரியும் கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டின் புகைப்படங்களே வெளியிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் Vector அறிவியல் மையத்தால் இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கொரோனா மாறுபாட்டின் புகைப்படங்கள் வெளியிடப்படுவது இதுவே முதல் முறைய என்பது குறிப்பிடத்தக்கது.
Here is what the Delta variant of the coronavirus looks like under an electron microscope.
— TRT World (@trtworld) October 25, 2021
The snaps were released by Russia’s Vector Science Centre, the first ever photographs to be published of the Covid-19 variant pic.twitter.com/30rZFuijZO