முதல் முறையாக அண்டார்டிகாவில் பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தல்., பல உயிர்களுக்கு ஆபத்து
பறவைக் காய்ச்சல் முதலில் அண்டார்டிகாவில் காணப்பட்டது.
இந்த கொடிய வைரஸ் பெங்குவின் மற்றும் பிற பூர்வீக பறவை இனங்களை அச்சுறுத்தும் என்று பிரிட்டிஷ் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பறவைகளின் முக்கிய இனப்பெருக்கம் செய்யும் இடமான அண்டார்டிகாவை, வரலாற்றில் முதல் முறையாக மிகவும் ஆபத்தான நோய்க்கிருமியான பறவை காய்ச்சல் அடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர்.
தென் அமெரிக்காவின் முனைக்கு கிழக்கே, அண்டார்டிக் நிலப்பரப்பின் வடக்கே, பிரித்தானிய கடல்கடந்த பகுதியான, தெற்கு ஜார்ஜியாவின், பறவை தீவில், இறந்த கடற்பறவைகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டதாக, பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பறவைக் காய்ச்சல் என கண்டறியப்பட்டுள்ளதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
புலம்பெயர்ந்த பறவைகளில் இருந்து பரவும் வைரஸ்
பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகம் உள்ள தென் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த பறவைகள் மூலம் இந்த வைரஸ் பரவியதாகக் கூறப்படுகிறது. அண்டார்டிகாவில் பறவைக் காய்ச்சல் பரவுவது பேரழிவு தரும் செய்தி என்று மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் பறவைக் காய்ச்சல் நிபுணர் மிட்செல் வில்லே தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து விலங்குகள் மற்றும் தாவர சுகாதார ஏஜென்சியின் வைராலஜித் தலைவர் இயன் பிரவுன், புலம்பெயர்ந்த பறவைகள் தென் அமெரிக்காவிலிருந்து அண்டார்டிக் தீவுகளுக்கும் பின்னர் நிலப்பரப்புக்கும் வைரஸைப் பரப்பக்கூடும் என்று கடந்த வாரம் எச்சரித்தார்.
இதுவரை வைரஸால் பாதிக்கப்படாத பெங்குவின் போன்ற பறவைகள் வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். இந்த மாத தொடக்கத்தில் கம்போடியாவில் பறவைக் காய்ச்சலுக்கு இரண்டு வயது சிறுமி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Bird flu detected in Antarctic, first time, British Antarctic Survey