பல்வேறு அழகிப் போட்டிகளில் பட்டம் வென்ற நமீதா மாரிமுத்து! இத்தனை சோதனைகளை கடந்து வந்தவரா? கண்ணீர் கதை
தமிழ் பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் திருநங்கை போட்டியாளர் என்றால் அது திருநங்கை நமீதா மாரிமுத்து தான்.
மிஸ் சென்னை, மிஸ் பாண்டிச்சேரி, மிஸ் இந்தியா போன்ற பல்வேறு அழகிப் இவர் பட்டம் வென்றவர். மேலும் நாடோடிகள் 2 உட்பட மொத்தம் 25 படங்களில் நடித்து இருக்கிறார்.
அதுமட்டுமின்றி திருநங்கைகளுக்காக நடத்தப்படும் ஃபேஷன் ஷோவில் மிஸ் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய நமீதா, ஸ்பெயினில் நடந்த மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனல் 2020 விருது போன்றவற்றை வென்றுள்ளார்.
மாடலிங் துறையை தேர்வு செய்து அதில் தனது சமூகத்தின் சார்பாக பங்கேற்று தனது சமூகத்திற்கே பெருமை சேர்த்தார்.
அந்த வகையில் நேற்றய நிகழ்ச்சியில் நமீதா மாரிமுத்து பேசியது பலரை கண் கலங்க வைத்துள்ளது.
இதுகுறித்து இவர் கூறுவதாவது, தனக்கு ஐந்தாம் வகுப்பு வரை எதுவும் தெரியவில்லை, நான் என் மற்றவர்களிடம் சேரவில்லை, 10 வயதுக்கு பிறகு தான் முகத்தை அழகாக வைக்க வேண்டும், பொட்டு வைக்க வேண்டும், உடை பார்த்து பார்த்து போட வேண்டும் என தோன்றியது.
ஐந்தாவது முதல் எட்டாவது போகும் போது ஒரு மாற்றம் உடலில் வந்தது, என் மார்பகம் வளர தொடங்கியது. வீட்டில் ஒரு பிள்ளை என்பதனால் அம்மா ஏற்கவில்லை. பல அடிகள் கஷ்டங்களை சந்தித்தேன். 15 முதல் 18 வயது வரை நான் அதிகம் அடி வாங்கி உடம்பு மறுத்துவிட்டது.
எனக்கு 15 வயதில் வீட்டை விட்டு வெளியில் செல்ல ஆரம்பித்துவிட்டேன். எங்கே போவது என தெரியாமல் நான்கு முறை வெளியில் சென்றுவிட்டேன், திரும்ப வந்துவிடுவேன்.
வீட்டில் விஷ ஊசி போட்டு கொன்றுவிடுவேன் என்று கூட மிரட்டினார்கள். இருந்தாலும் நான் எனக்கு 18 வயது ஆகும் வரை காத்திருந்தேன்.
18 வயது ஆனது. நான் போலீஸ் ஸ்டேஷனில் சென்று புகார் கொடுத்து வெளியே வந்துவிட்டேன். திருவல்லிக்கேணியில் மேன்சன் எடுத்து தங்கிய போது 100 அடியாட்கள் என்னை அடி அடி என அடித்து என்னை வண்டியில் ஏற்றிவிட்டார்கள்.
தனக்கு பைத்தியம் என சொல்லி certificate வாங்கிவிட்டு இருந்தார்கள். என்னை அடித்து மயக்கமாக்கி விட்டார்கள். மூன்று மாதமாக சிறை போன்ற இடத்தில் வைத்திருந்தார்கள். ஜன்னல் கம்பிகளை உடைத்து தப்பிக்க முடிவு செய்தேன் தப்பித்து விட்டேன்.
என் அப்பா அம்மாவை பார்க்கிறேன். என்னை மீண்டும் அந்த மருத்துவமனையில் சேர்க்க மறுக்கிறார்கள். அதன் பின் நான் தப்பித்து சென்றுவிட்டேன். அதன் பின் ஒரு இன்ஸ்பெக்டர் என்னை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். அங்கு கோர்ட்டில் என் இஷ்டத்திற்கு வாழலாம் என தீர்ப்பு சொன்னார்கள்.
என் அப்பா மட்டும் எண்ணிடம் பேசினார். எனக்கு அப்பா மட்டும் உதவி செய்தார். அதன் பின் ஆபரேஷன் செய்து கொண்டேன். பின்னர் அம்மாவும் என்னை ஏற்று கொண்டார்.
அதன் பின் நான் அழகி போட்டியில் பங்கேற்று ஜெயிக்க தொடங்கினேன். பல போட்டிகளின் வெற்றியும் பெற்றுள்ளேன். 25 படங்களில் நடித்திருக்கிறேன்.
திருநங்கைகள் என்றால் பாலியல், பிச்சை எடுப்பதற்காக என நினைகிறார்கள். அவர்கள் அப்படி ஆவதற்கு காரணம் பெற்றோர் மட்டும் தான். எங்களுக்கும் மனசு இருக்கு, எங்களுக்கு படிப்பு மட்டும் கொடுத்தால் போதும் நாங்கள் முன்னேறிவிடுவோம்" என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.
இது பார்ப்பவர்களின் மனதை பெரிதும் உலுக்கியுள்ளது. இதனால் பல மக்களின் பார்வை அவர் பக்கம் திரும்பியுள்ளது.