கடவுள் மன்னரைக் காப்பாற்றட்டும்... புதிய தேசிய கீதத்தை அதிகாரப்பூர்வமாக முதலில் பாடிய பெண் இவர்தான்!
பிரித்தானிய மகாராணியாரின் மறைவைத் தொடர்ந்து, தேசிய கீதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாற்றம் செய்யப்பட்ட தேசிய கீதத்தை முதலில் அதிகாரப்பூர்வமாக பாடியவர் என்ற பெருமை, Laura Wright (32) என்ற பெண்ணுக்குக் கிடைத்துள்ளது
பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மறைவைத் தொடர்ந்து, அவரது மகனான மன்னர் சார்லஸ் பட்டத்துக்கு வந்துள்ளார்.
மகாராணியாரைத் தொடர்ந்து மன்னர் பட்டத்துக்கு வந்துள்ளதால், நாட்டில் பல மாற்றங்கள் செய்யப்படவேண்டிய நிலை உருவாகியுள்ளது.
அவற்றில் முக்கியமானது தேசிய கீதம்!
God save our gracious queen (கடவுளே எம் ராணியைக் காத்தருளும்) எனத் துவங்குகிறது பிரித்தானிய தேசிய கீதம்.
Image: Getty Images
ஆனால், மகாராணியாரின் மறைவைத் தொடர்ந்து இளவரசர் சார்லஸ் மன்னராகியுள்ளதால், கடவுளே எம் மன்னரைக் காத்தருளும் (God save our gracious King), என்று தேசிய கீதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாற்றம் செய்யப்பட்ட தேசிய கீதத்தை முதலில் அதிகாரப்பூர்வமாக பாடியவர் என்ற பெருமை, Laura Wright (32) என்ற பெண்ணுக்குக் கிடைத்துள்ளது.
image - instagram
இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியின் துவக்க நிகழ்ச்சியில், Laura புதிய தேசிய கீதத்தைப் பாடியுள்ளார்.
Suffolkஇல் பிறந்த பாடகியான Laura அது குறித்துக் கூறும்போது, முதன்முறையாக புதிய தேசிய கீதத்தைப் பாடும்போது பயமாக இருந்ததாகவும், ஆனாலும், அப்போது தனது குடும்பமும் தன்னுடன் இருந்தது தனக்கு மகிழ்ச்சியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Laura, மறைந்த மகாராணியாரின் 90 ஆவது பிறந்தநாள், அவரது வைரவிழா ஆகிய நிகழ்ச்சிகளிலும் பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
image - instagram
image - instagram
image - instagram