ஆப்கானில் அதிகரிக்கும் பதட்டம்... முக்கிய மாகாணத்தில் சடலங்கள் கண்டெடுப்பு! மூடிமறைக்கும் தலிபான்
ஆப்கானிஸ்தானில் ஐந்து பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ஆக்ஸ்ட் 31ம் திகதியோடு ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டு படைகள் வெளியேறிய நாள் முதல் Nangarhar மாகாணத்தில் தலிபான்களை குறிவைத்து ஐஎஸ்-கே தொடர் தாக்தலை நடத்தி வருகிறது.
பல ஆண்டுகளாக ஐஎஸ்-கே-வின் முக்கிய தளமாக இருக்கும் Nangarhar மாகாணத் தலைநகர் ஜலாலாபாத்தில் கடந்த சனிக்கிழமை தாலிபான் வாகனங்களை குறிவைத்து மூன்று தனித்தனி வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை தாலிபான் வாகனம் மீது மற்றொரு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தொடர்ச்சியான தாக்குதல்களில் 35க்கும் மேற்பட்ட தலிபான் போராளிகள் கொல்லப்பட்டனர் என Amaaq News Agency தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்-கே பொறுப்பேற்றதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது.
இதைத்தொடர்ந்து நேற்று புதன்கிழமை ஜலாலாபாத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு தலிபான் போராளிகள் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.
ஆனால், இந்த தாக்குதலை உறுதி செய்த தலிபான் வட்டாரம், கொல்லப்பட்ட 3 பேரும் பொதுமக்கள் என தெரிவித்தது.
இந்நிலையில், இன்று வியாழக்கிழமை காலை Nangarhar மாகாணத்தின் Behsud மாவட்டத்தில் ஐந்து பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Nangarhar மாகாணத்தின் கலாச்சாரம் மற்றும் தகவல் துறையின் தலைவர் ஐந்து பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.
ஆனால், கொல்லப்பட்டவர்கள் யார்? எப்படி கொல்லப்பட்டனர் போன்ற கூடுதல் விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.