கேரளாவில் நடிகர் கிருஷ்ணா? கைது செய்ய 5 தனிப்படைகள் அமைப்பு
போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
நடிகர் கிருஷ்ணா
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு போதைப்பொருளை கொடுத்ததாக கைதான பிரதீப் வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
இதனால் நடிகர் கிருஷ்ணாவை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர பொலிஸார் திட்டமிட்டனர். அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
ஐந்து தனிப்படைகள்
ஆனால் அவர் தலைமறைவானதாக கூறப்படும் நிலையில், தற்போது கிருஷ்ணா கேரளாவில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகி இருக்கிறது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் அவரை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சைபர் கிரைம் நிபுணர்கள் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டறிய முயற்சி நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக நடிகர் கிருஷ்ணா மீது கைது நடவடிக்கை பாயும் என பொலிஸார் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |