204 பேருடன் பயணித்த விமானம் நடுவானில் கோளாறானதால் பரபரப்பு! அடுத்து என்ன நடந்தது?
பெலாரஸிலிருந்து துருக்கி நோக்கி பயணித்த பயணிகள் விமானம் நடுவானில் கோளாறான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெலாரஸ் தலைநகர் MinsK-ல் இருந்து துருக்கியின் Antalya பயணித்த belavia போயிங் 737 பயணிகள் விமானமே கோளாறு ஏற்பட்டுள்ளது.
விமானம் உக்ரேனை கடக்கும் போது எச்சரிக்கை சிக்னல் அனுப்பியுள்ளது. இதனையடுத்து, விமானம் அவசரமாக தரையிறங்க முதலில் ரஷ்யாவின் Voronezh-க்கு திசை திரும்பியுள்ளது, ஆனால், எரிபொருள் குறைவாக இருந்த காரணத்தினால் மாஸ்கோவில் தரையிறங்கியுள்ளது.
விமானம் பாதுகாப்பாக மாஸ்கோ domodedovo விமான நிலையத்தில் தரையிறங்கியதாக அவசர சேவையின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விமானத்தில் 197 பயணிகள் மற்றும் 7 விமானக்குழுவினர் என மொத்தம் 204 பேர் பயணித்துள்ளனர்.
விமானம் மாஸ்கோவில் தரையிறங்கிய பின் பயணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக மாஸ்கோவில் உள்ள பெலாரஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.