அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை: விமான கட்டணங்கள் உயரும் அபாயம்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் எச்சரிக்கை
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக விமான கட்டணங்கள் உயரக்கூடும் என்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விமான கட்டணங்கள் உயரும் அபாயம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக விமான பயணங்களின் கட்டணங்கள் அதிகரிக்கக்கூடும் என்று பிரிட்டிஷ் ஏர்வேஸின்(British Airways) தாய் நிறுவனமான IAG(International Airlines Group) எச்சரிக்கை விடுத்துள்ளது.

எரிபொருள் விலை மாற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக விமான நிறுவனங்கள் எப்போதும் முன்கூட்டியே விலை நிர்ணயம் செய்யப்பட்ட எரிபொருளை கொள்முதல் செய்யும் ஹெட்ஜிங்(hedging) முறையை பயன்படுத்தும்.
இருப்பினும், இந்த முறை ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைத்தன்மை காரணமாக தங்களால் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க முடியாது என்று IAG கவலை தெரிவித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை சரசரவென உயர்ந்து வருவதால் நிறுவனத்தின் செலவினங்களில் இருந்து தப்பிக்க விமான பயண கட்டணங்களை உயர்த்துவது தவிர வேறு வழியில்லை என்றும் IAG நிறுவனம் எச்சரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |