மகளை ஹீரோவாக காப்பாற்றிவிட்டு உயிரைவிட்ட தந்தை! புயலின் கோரதாண்டவத்தில் பலியான உயிர்கள்
பிரேசிலில் புயல், கனமழைக்கு 20 பேர் பலியான நிலையில், மீட்புக் குழுவினர் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் ஏற்பட்ட புயல்கள் காரணமாக கனமழை பெய்தது. இதில் உண்டான வெள்ளம் ரியோ டி ஜெனிரோ மற்றும் எஸ்பிரிட்டோ சாண்டோ மாநிலங்களைத் தாக்கியது.
இதுவரை கனமழை வெள்ளம் மற்றும் இடிபாடுகளில் சிக்கி 20 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Mimoso do Sul நகரில் வெள்ளத்திற்கு குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆனால் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர். அதேபோல் 8 பேர் ரியோ டி ஜெனிரோவில் பலியானதாகவும், அவர்களில் பலர் நிலச்சரிவுகளால் இறந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சனிக்கிழமை அன்று சிறுமி ஒருவரை தேடுதல் குழுவினர் மீட்டனர். அவர் சுமார் 16 நேரத்திற்கும் மேலாக சிக்கியிருந்த நிலையில் சிறுமி மீட்கப்பட்டதாகவும், அவரது தந்தை அருகில் இறந்து கிடந்ததாகவும் தெரிய வந்துள்ளது. குறித்த தந்தை அச்சிறுமியை வீரத்துடன் உடலைப் பாதுகாத்து இறந்ததாக அண்டை வீட்டுக்காரர் ஊடகத்திடம் கூறியுள்ளார்.
இதற்கிடையில், வெள்ளிக்கிழமை முதல் சுமார் 90 பேர் மீட்கப்பட்டதாக ரியோ அரசு மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் அடங்கிய அவசரக்குழு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |