பார்ரா புயல் எப்போது பிரித்தானியாவை தாக்கும்.. எந்தெந்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை? வெளியான முக்கிய தகவல்
பிரித்தானியாவை செவ்வாய்க்கிழமை பார்ரா புயல் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வாளர் Simon Partridge கூறியதாவது, புதன்கிழமை வரை மழை மற்றும் பனியுடன் தொடர்ந்து காற்று வீசும்.
புயலின் மிக மோசமான பகுதி அயர்லாந்தின் மேற்கில் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் செவ்வாயன்று இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் காற்றிற்கான மஞ்சள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டள்ளன.
அதே நேரத்தில் இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து, தெற்கு மற்றும் மேற்கு ஸ்காட்லாந்திற்கு பனிக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை அன்று பிரித்தானியாவின் பெரும்பாலான பகுதிகள் மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை அன்று பகலில் பனி, பனிக்கட்டி, மழை மற்றும் காற்று அனைத்தும் எதிர்பார்க்கப்படுகிறது.
பயணத்தடை, மின்வெட்டு மற்றும் பனிக்கட்டிகளால் ஏற்படும் காயங்கள் அனைத்திற்கும் சாத்தியம் இருப்பதாக என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதுமட்டுமன்றி இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் Christchurch Harbour Side, Fareham, Langstone மற்றும் Emsworth ஆகிய இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.
வேல்ஸில் Crofty, Swansea Bay and the Gower Coast, Carmarthenshire coast, Pembrokeshire coast, Ceredigion coast between Clarach and Cardigan, North Wales coast ஆகிய பகுதிகளுக்கு வெள்ளி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தில் West Luce Bay, Dumfries மற்றும் Galloway ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.