ஈரான் போரால் பிரித்தானியாவில் உணவுப்பொருட்கள் விலை உயரும் அபாயம்
ஈரான் போர் உலக நாடுகள் மீது எதிர்பாராத பல தாக்கங்களை ஏற்படுத்திவருகிறது.
விலை உயர்ந்துள்ளது எரிபொருட்கள் மட்டுமல்ல, இனி உணவுப்பொருட்கள் விலையும் உயரும் அபாயம் உள்ளது என்கிறார்கள் பிரித்தானிய வேளாண் துறையினர்.
உணவுப்பொருட்கள் விலை உயரும் அபாயம்
ஆம், பழைய காலங்களைப்போல விவசாயிகள் இலை தழைகளையும், மாட்டுச் சாணத்தையும் மட்டும் உரமாகப் போட்டு பயிர் செய்வதில்லை இப்போது.
இன்றைய காலகட்டத்தில் பெருமளவிலான விவசாயம், ரசாயன உரங்களை நம்பித்தான் உள்ளது.

விடயம் என்னவென்றால், ரயாயன உரம் தயாரிக்க அடிப்படையும் இயற்கை எரிவாயுதான். ஆக, ஈரான் போரால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, எரிபொருட்களை மட்டுமல்ல, உரங்கள் மீதும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது.
எப்படி உலகின் கச்சா எண்ணெயில் 20 சதவிகிதம் ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாக கொண்டுவரப்படுகிறதோ, அதேபோல, 30 சதவிகித யூரியா அல்லது அமோனியம் நைட்ரேட் என்னும் உரங்களுக்கான அடிப்படை ரசாயனமும் வளைகுடா நாடுகள் வழியாகத்தான் வருகிறது.
ஆக, முன்பின் யோசிக்காமல் ட்ரம்ப் துவக்கிய ஈரான் போரால் ஹோர்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள விடயத்தால் பாதிக்கப்பட்டுள்ளது எண்ணெய் போக்குவரத்து மட்டுமல்ல, உரத்துக்கான ரசாயன போக்குவரத்தும்தான்!
எரிபொருள் பற்றாக்குறை அச்சம்..பிரித்தானியாவை மீண்டும் அந்த பணிக்கு திரும்பச் செய்வேன் - கன்சர்வேடிவ் எம்.பி
பிரித்தானியாவைப் பொருத்தவரை, ட்ரினிடாட் தீவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் யூரியா அமோனியா நைட்ரேட், சுந்தர்லேண்ட் வழியாக வடகடலை அடைந்து, கடைசியாக இங்கிலாந்திலுள்ள நார்ஃபோல்க்கை வந்தடைகிறது.
ஆக, உரம் வருவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், இந்த ஆண்டு ஜனவரியில் டன் ஒன்றிற்கு 300 டொலர்களாக இருந்த யூரியா விலை இரண்டே மாதங்களில், அதாவது, மார்ச் மாத இறுதிவாக்கில் 700 டொலர்களாக உயர்ந்துள்ளது.
அப்படியானால், விவசாயிகள் சுமார் இரண்டு மடங்கு பணம் கொடுத்து உரம் வாங்கவேண்டும். அந்த கூடுதல் செலவு நுகர்வோரை வந்தடையும் அபாயம் உள்ளது. அல்லது, யூரியா இல்லாமலே விவசாயம் செய்யவேண்டியதுதான்.

அப்படிச் செய்தால், விளைச்சல் குறைந்துவிடும். எது நடந்தாலும், உணவுப்பொருட்கள் விலை அதிகரிப்பைத் தடுக்க முடியாது.
மேலும், ஆடுமாடுகளுக்கான வைக்கோல் குறைவான அளவே உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். ஆக, இறைச்சிக்கும் பிரச்சினை ஏற்படலாம்.
காய்கறிகளை விளைவிக்க உதவும் கண்ணாடி இல்லங்களை வெதுவெதுப்பாக வைத்துக்கொள்ள எரிவாயுவும், தாவரங்களுக்கு உரமும் தேவை.
ஆக, எரிவாயு பற்றாக்குறை, உர விலை உயர்வு என, ஈரான் போர் ஏற்படுத்திவரும் தாக்கம், கடைசியாக, உணவுப்பொருட்கள் விலை உயர்வில் போய் முடியப்போகிறது என்கிறார்கள் சம்பந்தப்பட்ட துறையினர்!