சட்டவிரோத திருமண வழக்கில் விடுவிக்கப்பட்ட சிலமணிநேரத்தில் இம்ரான் கான் மீண்டும் கைது! காரணம் என்ன?
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் விடுவிக்கப்பட்ட சிலமணி நேரத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
குற்றவாளி என தீர்ப்பு
பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் முன்னாள் இம்ரான் கான், சில வழக்குகளில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டது.
மேலும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியது உள்ளிட்ட வழக்குகள் தீர்க்கப்படாமல் இருந்தன. இந்த நிலையில், 71 வயதான இம்ரான் கான் இந்த வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டு வருகிறார்.
குறிப்பாக, இம்ரான் கானின் மனைவி பூஷ்ரா பீபி (49) தொடர்பில், அவர்களுக்கு எதிரான சட்டவிரோத திருமண வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், தற்போது அதில் இருந்தும் இம்ரான் கான் விடுவிக்கப்பட்டார்.
மீண்டும் கைது
அவர்கள் இருவரும் எந்த வழக்கிலும் தேவைப்படவில்லை என்றால், உடனடியாக சிறையில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
ஆனால், அவர் விடுவிக்கப்பட்ட சில மணிநேரங்களில் வன்முறையுடன் தொடர்புடைய 3 வழக்குகளின் கீழ் கைது செய்யப்படுவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இம்ரான் கான் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவர் தொடர்ந்து சிறையிலேயே இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |