பிரித்தானியாவில் கூட்டத்தினுள் காரை செலுத்திய முன்னாள் கடற்படை அதிகாரி: நீதிமன்றத்தில் கண்ணீர்
லிவர்பூல் பிரீமியர் லீக் வெற்றி அணிவகுப்பில் கால்பந்து ரசிகர்களை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் ராயல் கடற்படை அதிகாரி நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டார்.
வெற்றிக் கொண்டாட்டத்திற்கான பேரணியில் புகுந்த கார்
கடந்த 26ஆம் திகதி அன்று லிவர்பூல் கால்பந்து அணி வெற்றிக் கொண்டாட்டத்திற்கான பேரணி நடந்தது.
அப்போது பால் டாய்ல் (53) என்ற நபர், நகர மையத்தில் தனது காரை வேகமாக ஒட்டி கூட்டத்திற்குள் நுழைந்ததில் பலர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து, முன்னாள் ராயல் கடற்படை அதிகாரியான பால் டாய்ல் கைது செய்யப்பட்டு பின்னர் குற்றம்சாட்டப்பட்டார்.
இந்த நிலையில் மேற்கு டெர்பியைச் சேர்ந்த பால் டாய்ல் இன்று லிவர்பூல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
தலைகுனிந்து கண்ணீருடன்
அவர் நீதிமன்ற அறைக்குள் கொண்டுவரப்பட்டபோது கண்ணீருடன் காணப்பட்டார். அவர் தலைகுனிந்து கூண்டில் ஏறி தனது பெயர், முகவரி மற்றும் பிறந்த திகதியை உறுதிப்படுத்த மட்டுமே பேசினார். பின்னர் அவர் காவலில் வைக்கப்பட்டார்.
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது, வேண்டுமென்றே கடுமையான உடல் விளைவித்தல் போன்ற குற்றச்சாட்டுகளை டாய்ல் எதிர்கொள்கிறார்.
முன்னதாக, கார் மோதிய சம்பவத்திற்குப் பிறகு 7 பேர் மருத்துவமனையில் இருப்பதாகவும், மொத்தம் 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |