ICU-வில் இலங்கை முன்னாள் கேப்டன்! குணமடைய பிரார்த்தனை செய்யுமாறு ரசிகர்களுக்கு சனத் ஜெயசூரியா வேண்டுகோள்
இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் Bandula Warnapura குணமடைய பிரார்த்தனை செய்யுமாறு ரசிகர்களுக்கு இலங்கை முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூரியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் Bandula Warnapura தற்போது கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார்.
வர்ணபுரா திடீர் உடல்நலக்குறைவால் 3 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் கொரோனா நோயால் பாதிக்கப்படவில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முதல் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக இருந்த Warnapura, பின்னர் இலங்கை அணியின் பயிற்சியாளராகவும், இலங்கை கிரிக்கெட்டில் நிர்வாகியாகவும் செயல்பட்டார்.
Warnapura குணமடைய பிரார்த்திக்குமாறு தனது ரசிகர்களுக்கு இலங்கை முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூரியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.