மறுநாள் திருமண நிச்சயதார்த்தம்: ஒரே பைக்கில் நண்பர்களுடன் பயணித்த இளைஞர் மரணம் (வீடியோ)
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் கார் மோதிய விபத்தில், ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்த 4 பேர் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒரே இருசக்கர வாகனத்தில் 4 பேர்
உத்தரபிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டம் பல்கல்கஞ்ச் பகுதியில், ஒரே இருசக்கர வாகனத்தில் நண்பர்கள் 4 பேர் பயணித்தனர்.
கோரக்பூர் - வாரணாசி தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் சென்ற வாகனத்தின் மீது எதிரே புயல்வேகத்தில் வந்த கார் மோதியது.
இதில் பல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு நான்கு பேரும் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
திருமண நிச்சயதார்த்தம்
அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் சுனில் குமார் (22), பிரதியும்னா குமார் (22), அரவிந்த் குமார் (23) மற்றும் ராகுல் குமார் (22) என்பது தெரிய வந்தது.
அவர்களில் ராகுல் குமாருக்கு கடந்த 1ஆம் திகதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது.
விபத்து குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |