வெளிநாட்டில் விஷம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட பிரித்தானிய குடும்பத்தில் நான்காவது மரணம்

United Kingdom
By Balamanuvelan Oct 20, 2022 07:30 AM GMT
Report

வெளிநாட்டுக்குச் சென்றிருந்த பிரித்தானியர்கள் சிலர் சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்த நிலையில், அவர்களுடைய உணவில் விஷம் வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது நினைவிருக்கலாம்.

தற்போது அந்தக் குடும்பத்தில் நான்காவது நபரும் உயிரிழந்துள்ளார்.

ஜூலை மாதம், பிரித்தானியாவின் Cardiffஐச் சேர்ந்த Rafiqul Islam (51) குடும்பத்தினர், இரண்டு மாத விடுமுறைக்காக பங்களாதேஷ் சென்றிருந்தனர். அங்கு, Sylhet என்ற இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்து அவர்கள் தங்கியிருந்த நிலையில், ஜூலை 26ஆம் திகதி, சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்கச் சென்ற குடும்பத்தினர் சுயநினைவிழந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே, Rafiqul Islam (51)மற்றும் அவரது மகனான Mahiqul (16) ஆகிய இருவரும் உயிரிழந்தார்கள்.

வெளிநாட்டில் விஷம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட பிரித்தானிய குடும்பத்தில் நான்காவது மரணம் | Fourth Cardiff Family Member Dies

Rafiqul குடும்பத்தினருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கினார்கள். ஆனால், பிரேதப் பரிசோதனையில், அவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.

பின்னர், Rafiqul குடும்பத்தினர் தங்கியிருந்த குடியிருப்பில், மின்சாரம் தடைபட்டால் பயன்படுத்துவதற்காக ஒரு பழைய ஜெனரேட்டர் இருந்ததும், அதிலிருந்து வெளியான புகையால் மூச்சுத்திணறி, கார்பன் மோனாக்சைடு நச்சு காரணமாக Rafiqulம் அவரது மகனும் உயிரிழந்ததும் தெரியவந்தது.

ஒரு வாரத்திற்குப் பின், Rafiqul, Husnara (45) தம்பதியரின் மகளான Samira Islam (20) மருத்துவமனையில் உயிரிழந்தார்.

வெளிநாட்டில் விஷம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட பிரித்தானிய குடும்பத்தில் நான்காவது மரணம் | Fourth Cardiff Family Member Dies

இந்நிலையில், இந்த சம்பவம் நடந்து மூன்று மாதங்களுக்குப் பின், தற்போது Rafiqulஇன் மனைவியாகிய Husnaraவும் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார்.

சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய, தம்பதியரின் மற்றொரு மகனான Sadiqul Islam (24) மட்டுமே இப்போது அந்தக் குடும்பத்தில் உயிருடன் இருக்கிறார்.

பிரித்தானியாவிலிருந்து விடுமுறைக்காக சென்ற இடத்தில் ஒரு குடும்பத்தின் நான்கு உறுப்பினர்கள் உயிரிழந்துவிட்ட விடயம் அந்தக் குடும்பத்தில் நீங்கா துயரை உருவாக்கிவிட்டது.  


நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் திருவிழா

4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US