பிரான்சில் மூளைக்காய்ச்சலுக்கு ஒருவர் பலி: பிரித்தானியாவுடன் தொடர்புடையதா?
பிரித்தானியாவின் சில பகுதிகளில் மூளைக்காய்ச்சல் பரவிவரும் நிலையில், பிரான்சிலும் ஒருவர் மூளைக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார்.
இந்நிலையில், பிரித்தானியாவில் பரவும் மூளைக்காய்ச்சலுக்கும் பிரான்சில் ஒருவர் உயிரிழந்ததற்கும் தொடர்பு உள்ளதா என கேள்வி எழுந்துள்ளது.
பிரான்சில் மூளைக்காய்ச்சலுக்கு ஒருவர் பலி
பிரான்சின் நார்மாண்டியில் அமைந்துள்ள Orano's La Hague என்னுமிடத்திலுள்ள அணு எரிபொருள் நிறுவனத்தில் பணியாற்றிவந்த பணியாளர் ஒருவர், வியாழக்கிழமையன்று மூளைக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவருடன் 50 பேர் தொடர்பிலிருந்தது தெரியவந்துள்ளதால், அவர்கள் அனைவருக்கும் 48 மணி நேரத்துக்கு ஆன்டிபயாட்டிக் சிகிச்சையளிக்கப்பட உள்ளது.
அவர்கள் மார்ச் மாதம் 20ஆம் திகதிவரை, அதாவது 10 நாட்கள் தங்கள் வீடுகளில் தங்கியிருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
பிரித்தானியாவின் சில பகுதிகளில் மூளைக்காய்ச்சல் பரவிவரும் நிலையில், இங்கிலாந்தில் இரண்டு பேர் மூளைக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார்கள், மொத்தம் 27 பேருக்கு மூளைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பிரித்தானியாவில் பரவும் மூளைக்காய்ச்சலுக்கும் பிரான்சில் ஒருவர் உயிரிழந்ததற்கும் தொடர்பு இல்லை என பிரான்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |