நீங்கள் ஐரோப்பிய ஒன்றிய விதிகளை பின்பற்றியே ஆகவேண்டும்! பிரபல நாட்டிற்கு பிரான்ஸ், ஜேர்மனி கூட்டு எச்சரிக்கை!
போலந்து, ஐரோப்பிய ஒன்றிய விதிகளை பின்பற்ற வேண்டும் என பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
போலந்து நாட்டின் ஆளும் வலதுசாரி சட்டம் மற்றும் நீதி கட்சி (Law and Justice Political party) அறிமுகப்படுத்திய நீதி சீர்திருத்தங்கள் தொடர்பாக போலந்தும் ஐரோப்பிய ஒன்றியமும் முரண்படுகின்றன, இது நாட்டின் ஜனநாயகத்தை அச்சுறுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் ஐரோப்பிய ஒன்றையே நாடுகளிடையே பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது, இதற்கிடையில் போலந்து ஐரோப்பிய ஒன்றிய அமைப்பிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படலாம் என கருத்துக்கள் நிலவுகின்றன.
போலந்தின் அரசியலமைப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை அளித்த தீர்ப்பு ஒன்றில், சில ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தக் கட்டுரைகள் போலந்து அரசியலமைப்போடு "பொருந்தாது" மற்றும் போலந்தின் நீதித்துறையில் தலையிடுவதன் மூலம் "தங்கள் திறன்களின் எல்லைக்கு அப்பால் செயல்பட வேண்டாம்" என்று ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களை எச்சரித்தது.
இந்நிலையில், போலந்து தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து, பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-யிவ்ஸ் லே ட்ரியன் (Jean-Yves Le Drian) மற்றும் அவரது ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் ஹெய்கோ மாஸ் (Heiko Maas) ஆகியோர் இரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர்.
அதில் "ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக பொதுவான மதிப்புகள் மற்றும் விதிகளுக்கு முழுமையான மற்றும் நிபந்தனையற்ற பற்றுதலுடன் கைகோர்க்கிறது என்பதை நாங்கள் உங்களுக்கு நினைவூட்டுகிறோம்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், "இந்த விதிமுறைகளையும் மதிப்புகளையும் மதிக்க வேண்டியது ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஒரு முக்கிய இடத்தை ஆக்கிரமித்துள்ள போலந்தின் பொறுப்பாகும்."
"இது வெறுமனே ஒரு தார்மீக அர்ப்பணிப்பு அல்ல. இது சட்டப்பூர்வ உறுதிப்பாடும் கூட" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.