ரஷ்ய கோடீஸ்வரரை ஐரோப்பிய நாட்டிடம் ஒப்படைத்த பிரான்ஸ்
ரஷ்ய கோடீஸ்வரர் விளாடிமிர் அன்டோனோவை லிதுவேனியாவிடம் பிரான்ஸ் ஒப்படைத்தது.
ரஷ்ய கோடீஸ்வரர்
கடந்த 2024ஆம் ஆண்டில் லிதுவேனியாவில் பண மோசடி, நிதியை வீணடித்தல், மோசடியான திவால்நிலை குற்றச்சாட்டுகளில் சிக்கியவர் ரஷ்ய கோடீஸ்வரர் விளாடிமிர் அன்டோனோவ் (Vladimir Antonov).
மேலும், சட்டவிரோதமாக பெறப்பட்ட சொத்துக்களை கையாளுதல், மோசடியான கணக்கியல் மற்றும் ஆவணப் போலி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன.
இங்கிலாந்து கால்பந்து கிளப்பான போர்ட்ஸ்மவுத்தின் முன்னாள் உரிமையாளரான இவர், கடந்த ஆண்டு டிசம்பரில் மேற்கு பிரான்ஸின் மோர்பிஹான் பகுதியில் வைத்து ஐரோப்பிய கைது வராண்டின் கீழ் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு 10.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், அவரை நாடு கடத்தலாம் என்று கடந்த மாத தொடக்கத்தில் பிரெஞ்சு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனால் அவர் லிதுவேனியாவிற்கு நாடு கடத்தப்பட இருந்தார்.
லிதுவேனியாவிடம் ஒப்படைப்பு
இந்த நிலையில், Snoras வங்கியின் முன்னாள் உரிமையாளருமான அன்டோனோவ் லிதுவேனியாவின் Vilnius அதிகாரிகளிடம் பிரான்ஸ் ஒப்படைத்ததாக, அரசு வழக்கறிஞர் அலுவலகம் திங்களன்று தெரிவித்தது.
இந்த வழக்கில் Snoras வங்கியின் மற்றொரு நிர்வாகியும் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார். ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த Snoras வங்கி, லிதுவேனியாவின் நான்காவது மிகப்பெரிய வங்கியாக திகழ்ந்தது.
ஆனால், அன்டோனோவின் மோசடியால் ஏற்பட்ட இழப்புகள் குறைந்தது 478 மில்லியன் யூரோக்கள் என கைது வாரண்டின்படி மதிப்பிடப்பட்டுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |