பிரான்ஸ் இனப்படுகொலையை முற்றிலும் கவனிக்கத் தவறிவிட்டது: வெளியாகியுள்ள ஆய்வுக் குழுவின் அறிக்கை

France Genocide Rwanda
By Balakumar Mar 27, 2021 10:42 AM GMT
Report

இனப்படுகொலையை பிரான்ஸ் முற்றிலும் கவனிக்கத் தவறிவிட்டது என நிபுணர்கள் குழு ஒன்று தங்கள் ஆய்வுக்குப்பின் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

ருவாண்டாவில் ஹூட்டு இனத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள், சிறுபான்மையினரான துட்சி இனத்தைச் சேர்ந்தவர்களில் சுமார் 800,000 பேரை படுகொலை செய்தார்கள்.

இந்த சதியில் பிரான்சுக்கும் பங்கு இருப்பதாக ருவாண்டா நாடு நீண்ட காலமாக பிரான்சைக் குற்றம் சாட்டிவந்தது.

1994 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், 100 நாட்களில் துட்சி இனத்தைச் சேர்ந்தவர்களில் சுமார் 800,000 பேர் கொல்லப்பட்டார்கள். எந்த நாடும் வெளிப்படையாக அதைக் கண்டிக்கவில்லை.

பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், ருவாண்டா இனப்படுகொலை தொடர்பில் பிரான்ஸ் மீதான குற்றச்சாட்டு குறித்து ஆராய்வதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன் 15 பேர் கொண்ட ஆணையம் ஒன்றை ஏற்படுத்தினார்.

அதன்படி முன்பு இரகசியமாக வைக்கப்பட்ட சில ஆவணங்களை அணுகும் உரிமையை அந்த ஆணையத்துக்கு வழங்கினார் மேக்ரான்.

அப்போது, முன்னாள் ருவாண்டா அதிபரான ஹூட்டு இனத்தைச் சேர்ந்த Juvénal Habyarimanaவுடன் நெருங்கிய உறவு வைத்திருந்த பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதியான François Mitterrandஉடைய சில ஆவணங்கள் அந்த ஆணையத்துக்கு கிடைத்தன.  

1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி, Habyarimanaவும் அவரது கூட்டாளியும் மற்றொரு ஹூட்டு இனத்தவருமான புருண்டி அதிபரான Cyprien Ntaryamiraவும் சென்ற விமானம் ஒன்று ஏவுகணையால் தாக்கப்பட்டதில் இருவரும் பலியானார்கள்.

அவர்கள் உயிரிழப்புக்குக் காரணம் சிறுபான்மையினரான துட்சி இனத்தவரைக் கொண்ட புரட்சி அமைப்பு ஒன்றுதான் என்று கூறி, ஹூட்டு இனத்தவர்களால் துட்சி இனத்தவர்கள் வேட்டையாடப்பட்டார்கள்.

அப்போதுதான், துட்சி இனத்தைச் சேர்ந்தவர்களில் சுமார் 800,000 பேர் பயங்கரமாக படுகொலை செய்யப்பட்டார்கள், நாட்டில் எங்கு பார்த்தாலும் இரத்த ஆறு ஒடியது, கண்ணில் கண்ட இடமெல்லாம் சவங்களாக காணப்பட்டன.

அந்த இனப்படுகொலையுடன் பிரான்சுக்கு தொடர்பு இருப்பதாக ருவாண்டா குற்றம் சாட்டி வந்த நிலையில்தான், பிரான்சுக்கும் அந்த இனப்படுகொலைக்கும் என்ன தொடர்பு என்பதை வெளிப்படுத்துவதற்காகத்தான், இமானுவல் மேக்ரான் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தார்.

குறிப்பாக, அந்த ஆணையத்தில் உள்ள யாரும் ருவாண்டா நாட்டவர்கள் அல்ல, முதலாம் உலக மகா யுத்தத்தின்போது ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து ஆராய்ந்த, இனப்படுகொலை குறித்து ஆராயும் சர்வதேச குற்றவியல் சட்டம் அறிந்த நிபுணர்கள் அவர்கள்.

1994ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 22ஆம் திகதி, ஐக்கிய நாடுகள் அமைப்பு தென்மேற்கு ருவாண்டாவில் Operation Turquoise பிரெஞ்சுப் படைகளை இறக்கியது.

ஆனால், அந்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இனப்படுகொலை செய்யும் கொலைகாரர்களிடமிருந்து அந்த பிரெஞ்சுப்படை சிலரை காப்பாற்றினாலும், அவர்கள் மிகவும் தாமதமாக வந்ததாகவும், அதனால் கொலைகாரர்கள் சிலர் தப்பிவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

2015ஆம் ஆண்டு, அப்போது பிரான்ஸ் ஜனாதிபதியாக இருந்த François Hollande, ருவாண்டா தொடர்பான ஆவணங்கள் வெளியிடப்படும் என அறிவித்தாலும், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு, அவை இரகசியமாகவே வைக்கப்படும் என பிரான்ஸ் அரசியல் சாசன கவுன்சில் தெரிவித்துவிட்டது.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஆய்வுக்குழுவின் அறிக்கை, ருவாண்டா இனப்படுகொலையை பிரான்ஸ் கவனிக்கத்தவறிவிட்டது என்றும், அந்த இனப்படுகொலை குறித்து பிரான்சுக்கு பெரிய பொறுப்பு உள்ளது என்றும், ஆனால், பிரான்சுக்கு அந்த இனப்படுகொலையில் பங்கில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையை வரவேற்றுள்ள ருவாண்டா, தனது அறிக்கையை விரைவில் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது.  

GalleryGalleryGalleryGallery
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, கிளிநொச்சி, கொழும்பு

21 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ் சுன்னாகம் மேற்கு, Jaffna, Surrey, United Kingdom, Tolworth, United Kingdom

22 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

18 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், London, United Kingdom

26 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மாப்பாணவூரி, சுதுமலை

23 Apr, 2020
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Grevenbroich, Germany

19 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பிரித்தானியா, United Kingdom

23 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், Jaffna, செங்காளன், Switzerland

24 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய் வடக்கு, New Jersey, United States

19 Apr, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு அளுத் மாவத்தை, Brampton, Canada

23 Apr, 2020
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, சிவபுரம், வவுனிக்குளம், பாண்டியன்குளம், அனலைதீவு, Neuss, Germany, Oslo, Norway, சென்னை, India

22 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lincolnshire, United Kingdom

22 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பிரான்ஸ், France, Aulnay-sous-Bois, France

23 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சுவிஸ், Switzerland

15 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கந்தர்மடம்

12 May, 2015
நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

02 Apr, 2005
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, தெல்லிப்பழை, Rochester, United States

21 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

பண்ணாகம், நியூ யோர்க், United States

18 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US