ஆயிரக்கணக்கில் பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோர்: வேடிக்கை பார்க்கும் பிரான்ஸ் அதிகாரிகள்
ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக சிறுபடகுகளில் பயணிக்கும் புலம்பெயர்வோரை பிரான்ஸ் அதிகாரிகள் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பதற்கு ஆதாரமாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ஒரே நாளில் 1,194 புலம்பெயர்ந்தோர்
சனிக்கிழமையன்று, ஒரே நாளில் 1,194 புலம்பெயர்வோர் படகுகள் மூலம் ஆங்கிலக்கால்வாயைக் கடந்த சம்பவமும் நடந்துள்ளது.
ஆனால், பிரான்ஸ் அதிகாரிகள் அவர்களைக் கட்டுப்படுத்தவில்லை. அத்துடன், சில படகுகளுக்கு காவலாக அவர்கள் பயணிக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
பிரித்தானிய பாதுகாப்புச் செயலரான John Healey கூறும்போது, அந்த காட்சிகள் தன்னை அதிர்ச்சியடைய வைத்ததாக தெரிவித்துள்ளார்.
உண்மை என்னவென்றால், கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரித்தானியா அதன் எல்லைகளின் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிட்டது என்று கூறியுள்ள அவர், முந்தைய அரசாங்கம் புகலிட அமைப்பை குழப்பத்திலும், வரலாறு காணாத அளவிலான புலம்பெயர்தலிலும் விட்டுச் சென்றுள்ளது என்றும் கூறியுள்ளார்.
பிரான்ஸ் பொலிசார் புலம்பெயர்வோர் பயணிக்கும் படகுகளை இடைமறிக்க தலையிட முடியாதது உண்மையிலேயே பெரிய பிரச்சினை ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |