உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்திய பிரான்சின் ‘டி கிராசே’ நீர்மூழ்கிக் கப்பல்: எதிர்கால போருக்கான வடிவமைப்பா?
பிரான்ஸ் தனது அதிநவீன அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ‘டி கிராசே’ (Duguay-Trouin) அறிமுகம் செய்துள்ளது. இது அமெரிக்காவின் பென்டகன் தலைமையகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நீர்மூழ்கிக் கப்பல் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் பிரான்ஸ் முன்னணி வகிக்கும் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
‘பராகுடா’ திட்டத்தின் கீழ் ஒரு புதிய சகாப்தம்
பிரான்ஸ் கடற்படையில் தற்போது பயன்பாட்டில் உள்ள ரூபிஸ் வகை நீர்மூழ்கிக் கப்பல்களை 2030-ம் ஆண்டுக்குள் மாற்றும் வகையில், 10 பில்லியன் யூரோ மதிப்பிலான ‘பராகுடா’ (Barracuda) திட்டத்தின் கீழ் ‘டி கிராசே’ தயாரிக்கப்பட்டுள்ளது. இது எதிரிப் படைகளால் கண்டுபிடிக்க முடியாத வகையில் மிக நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நீர்மூழ்கிக் கப்பலில் 1000 கி.மீ. தூரம் சென்று தரை இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகள் மற்றும் எப்21 டார்பிடோக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
எதிர்கால போருக்கான வடிவமைப்பு
‘டி கிராசே’ எதிர்கால போர் முறைகளுக்கு ஏற்ற வகையில், எதிரிப் படைகளிடம் சிக்காத அதிநவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது 4,700 டன் முதல் 5,200 டன் வரை எடையுள்ளதாகவும், 324 அடி நீளமுள்ளதாகவும் உள்ளது.
இது ஹைப்ரிட் தொழில்நுட்பத்தில் (அணுசக்தி மற்றும் நீர் மின்சக்தி) செயல்படும் திறன் கொண்டது.
இதன் காரணமாக, இந்த நீர்மூழ்கிக் கப்பல் ஆண்டுக்கு 270 நாட்கள் ரோந்து செல்லும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்த புதிய வரவு பிரான்ஸ் கடற்படையை மட்டுமல்லாமல், நேட்டோ படைகளையும் கணிசமாக வலுப்படுத்தும்.
அமெரிக்காவின் வியப்பு
கடற்படை வலிமையில் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவிற்கு, பிரான்ஸ் ‘டி கிராசே’ நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்தியது சற்றே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய ஒரு நவீன நீர்மூழ்கிக் கப்பலை பிரான்ஸ் உருவாக்கும் என்று பென்டகன் அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை. தற்போது, ‘டி கிராசே’ நீர்மூழ்கிக் கப்பல் குறித்து பென்டகன் அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |