தனது கால்களை தானே வெட்டி கொண்ட கோடீஸ்வர பெண்! காரணம் என்ன? மோசடி பெண்ணின் முகத்திரையை கிழிக்கும் ஒரு செய்தி
அவுஸ்திரேலியாவில் பலரிடம் மோசடி செய்து அவர்களின் பணத்தை பறித்து கோடீஸ்வரியான பெண், பொலிசாரிடம் இருந்து தப்பிக்க தனது கால்களை வெட்டி கொண்டிருக்கலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மெலிசா கேடிக் (49) என்ற பெண் கடந்தாண்டு நவம்பர் மாதம் 12ஆம் திகதி நியூ சவுத் வேல்ஸில் உள்ள தனது வீட்டில் இருந்து மாயமானார். மெலிசா சாதாரணமான பெண் அல்ல, அவர் மீது பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளது.
அதாவது பலரிடம் தொழில் தொடர்பாக பணத்தை பெற்று மோசடி செய்து பெரும் கோடீஸ்வரியாக மாறியிருக்கிறார். பின்னர் விலையுயர்ந்த ஆடைகள், சொகுசு வீடுகள், கார்கள் என ஆடம்பரமான வாழ்வை வாழ்ந்து வந்தார்.
ஒரு கட்டத்தில் மெலிசாவின் மோசடி செயல்கள் அம்பலமான நிலையில் அவர் மாயமானார். பொலிசாரிடம் இருந்து தப்பிக்கவே அவர் எங்கோ மறைந்துள்ளார் என கூறப்படுகிறது.
7 News Spotlight
அதே சமயம் மெலிசா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவர் கணவர் ஆண்டனி கூறுகிறார். இதனிடையில் மெலிசாவின் வெட்டப்பட்ட கால்களை பொலிசார் சில மாதங்களுக்கு முன்னர் கடற்கரை ஓரத்தில் இருந்து கைப்பற்றினர்.
மெலிசாவே தனது கால்களை வெட்டி கொண்டிருக்கலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இப்படி செய்வதால் பொலிசார் தான் இறந்துவிட்டதாக கருதி வழக்கை மூடிவிடுவார்கள் என்பதால் அவர் அப்படி செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
ஆண்டனி கூறுகையில், கால்களை வெட்டி கொள்ளும் நபராக மெலிசாவை நான் பார்க்கவில்லை, அவளை யாராவது கொலை செய்திருக்கலாம் என கூறியுள்ளார்.
மெலிசாவின் மோசடியில் அவர் குடும்பத்தாருக்கு எந்தவொரு தொடர்பும் இருப்பதாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
7 News Spotlight