கனேடிய மக்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள கடவுச்சீட்டு (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
தெற்கு கிரீஸின் கடற்கரையில் குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 78 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானவர்கள் நீரிழ் மூழ்கி காணாமல்போயுள்ளதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கனடாவில் காட்டுத்தீ பரவியதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டணம் இன்றி கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்கொரிய அரசின் செலவில் கட்டப்பட்ட தகவல் தொடர்பு அலுவலகத்தை தகர்த்தமைக்காக வட கொரிய அரசிடம் 290 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தென்கொரியா வழக்கு தொடர்ந்துள்ளது.
ஆப்பிரிக்க நாட்டில் லாரி மீது பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 32 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பிலிப்பைன்ஸின் மணிலாவில் ஆழமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |