தந்தை ஒருவரின் கொடுஞ்செயலால்... பிரெஞ்சுச் சிறுவனுக்கு கிடைத்த வாழ்நாள் தண்டனை
கிழக்கு பிரான்சிலுள்ள ஹேகன்பாக் கிராமத்தில், தனது தந்தையின் வாகனத்திற்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த 9 வயது சிறுவன் ஒருவனை பிரெஞ்சு காவல்துறை மீட்டுள்ளது.
நவம்பர் 2024 முதல்
கடந்த நவம்பர் 2024 முதல் குறித்த சிறுவன் அந்த வாகனத்திற்குள் பூட்டி வைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளான். நீண்டகாலச் சிறைவைப்பின் காரணமாக நடக்கும் திறனை இழந்த நிலையிலும், அச்சிறுவன் நிர்வாணமாகவும் கடும் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடனும் மீட்கப்பட்டுள்ளான்.

வேனை வலுக்கட்டாயமாகத் திறந்த நிலையில், குப்பைக் குவியலின் மீதும் மலத்திற்கு அருகிலும், போர்வையால் மூடப்பட்ட நிலையில், நிர்வாணமாகவும் படுத்திருந்த சிறுவனை காவல்துறையினர் கண்டெடுத்தனர்.
வெளியான தகவலின் அடிப்படையில், அந்தச் சிறுவன் நவம்பர் 2024 முதல் வாகனத்திற்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்துள்ளான். சிறுவனைக் கண்டுபிடிக்கப்பட்டபோது, நிர்வாணமாகவும், கடும் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடனும் காணப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
மேலும், நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து அமர்ந்த நிலையிலேயே இருக்கக் கட்டாயப்படுத்தப்பட்டிருந்ததால், சிறுவனால் இனி நடக்க இயலாத நிலையிம் ஏற்பட்டுள்ளது.
வேனிலிருந்து சிறார் ஒருவரின் சத்தம் கேட்டதாக அண்டை வீட்டுக்காரர் ஒருவர் புகார் தெரிவித்ததை அடுத்து, அதிகாரிகள் சம்பவயிடத்திற்கு விரைந்தனர். அந்த வாகனம், சுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மனியின் எல்லைகளுக்கு அருகிலுள்ள ஹேகன்பாக் என்ற கிராமத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சிறுவனின் தந்தையிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, தனது துணைவியிடமிருந்து சிறுவனைப் பாதுகாப்பதற்காகவே அவனை அடைத்து வைத்திருந்ததாக அதிகாரிகளிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடையப் பெண்மணி அந்தச் சிறுவனை ஒரு மனநல மருத்துவமனையில் ஒப்படைக்க கட்டாயப்படுத்தி வந்ததாக தெரிவித்துள்ளார். இருப்பினும், சிறுவனுக்கு ஏதேனும் உளவியல் பாதிப்பு இருந்ததற்கான மருத்துவ ஆதாரம் எதுவும் இல்லை என்று அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத சிறைவைப்பு
இதனிடையே, பிரெஞ்சு ஊடகங்களில் வெளியான தகவலின் அடிப்படையில், சிறுவனுக்கு அவன் தந்தை ஒரு நாளைக்கு இருமுறை உணவு கொண்டு வந்து கொடுத்ததுடன், வேனுக்குள் தண்ணீர் போத்தல்களையும் வைத்துச் சென்றிருக்கிறார்.
அந்தச் சிறுவன் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் குப்பைப் பைகளில் மலம் கழிக்க நிர்பந்திக்கப்பட்டதாகவும், 2024-ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து ஒருமுறைக் கூட குளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

தற்போது சிறுவனின் தந்தை மீது கடத்தல், சட்டவிரோத சிறைவைப்பு மற்றும் சிறாருக்குப் பராமரிப்பு, உணவு மறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, சிறுவன் வேனில் சிறை வைக்கப்பட்டிருந்தது தனக்குத் தெரியாது என அவரது துணைவி மறுத்துள்ளார், ஆனால் ஆபத்தில் உள்ள சிறுவனுக்கு உதவத் தவறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |