முன்னாள் கணவரால்... 487 ஆண்களுடன்: பிரெஞ்சுப் பெண்மணி ஒருவரின் அதிரவைத்த வாக்குமூலம்
பிரான்ஸைச் சேர்ந்த ஒரு வங்கி மேலாளர், தனது முன்னாள் காதலியை ஏழு ஆண்டுகளாகத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு, சித்திரவதை மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தன்னை உளவியல் ரீதியாக
குறித்த நபர் இணையம் வாயிலாகத் தான் கண்டறிந்த அந்நியர்கள் மூலமாகவும் தமது காதலியை துன்புறுத்தியுள்ளார்.

42 வயதான Laetitia R என்பவர் தமது புகாரில், தன்னை உளவியல் ரீதியாக Guillaume Bucci என்பவர் கட்டுப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். 2015 முதல் 2022 வரை, தன்னைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர புச்சி வன்முறை கலந்த பாலியல் விளையாட்டுகளைப் பயன்படுத்தியதாக Laetitia R. கூறியுள்ளார்.
மேலும், தாம் அவரை விட்டு விலகினால், அவரிடம் இருக்கும் அந்தரங்கக் காணொளிகள் இணையமூடாக அவர் பகிரங்கப்படுத்தலாம் எனவும் அஞ்சியதாக குறிப்பிட்டுள்ளார்.
கழுத்தை நெரித்தல், காயப்படுத்துதல் போன்ற செயல்களை புச்சி ஒப்புக்கொண்ட போதிலும், அவை தங்களது நெருங்கிய உறவின் பின்னணியில் பரஸ்பர சம்மதத்துடன் நடந்த பாலியல் விளையாட்டுகள் என்று கூறியுள்ளார்.
தமது செயல்கள் அவரை காயப்படுத்தியதாக தாம் கருதவில்லை என்றும் புச்சி விசாரணையில் குறிப்பிட்டுள்ளார். இந்தச் செயல்களைத் தவிர, Laetitia R.-ஐ பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு வற்புறுத்தியதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
புச்சி அவரைத் தன் நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் அந்நியர்களுக்கும் அறிமுகப்படுத்தியதுடன், அவருடன் உறவு கொண்ட ஆண்களின் பட்டியலைத் தயாரித்து வைக்குமாறு Laetitia R.டம் புச்சி கூறியுள்ளார்.

தாம் 487 ஆண்கள் வரையில் பட்டியல் தயாரித்ததாகவும், ஒரு கட்டத்தில் எண்ணுவதை நிறுத்திவிட்டதாகவும், அவர்களில் சிலரை 10 முறை வரை பார்த்திருப்பதாகவும் விசாரணையின் போது Laetitia R. கூறியுள்ளார்.
ஆயுள் தண்டனை
தான் அனுபவித்த கொடுமையின் காரணமாக, அவர் தற்போது குறிப்பிடத்தக்க உடல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளார். வேறொரு பெண்ணுக்கு எதிராக அவர் மீண்டும் குற்றம் இழைப்பதைத் தடுக்கும் வகையில், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் வலியுறுத்தியபோதிலும், புச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் தனது சிறைத் தண்டனையில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கை அனுபவித்த பின்னரே, பரோலுக்குத் தகுதி பெறுவார் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Gisele Pelicot என்பவருக்கு வீட்டில் மயக்க மருந்து கொடுத்து மயக்கமடையச் செய்த பின்னர், அவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதற்காக அந்நியர்களை நியமித்த அவரது கணவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கு, Laetitia R. என்பவரைத் தனது வழக்கு குறித்துப் பேசத் தூண்டியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |