நிருபர் கேள்வியால் தெறித்த குடும்பத்தினர்.. ஜோகோவிச்சின் பயண ஆவணங்கள் குறித்த வெடித்தது புதிய சர்ச்சை
செர்பியாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பை நோவக் ஜோகோவிச்சின் குடும்பத்தினர் திடீரென முடித்துக்கொண்டதால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கான விசா ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் நடைபெற்ற சட்ட போராட்டத்தில் செர்பியா டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.
திங்கள்கிழமை இரவு மெல்போர்னில் குடியேற்ற காவலில் இருந்து ஜோகோவிச் விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, அவரது குடும்பத்தினர் செர்பியாவின் Belgrade-ல் செய்தியாளர்களை சந்தித்தனர்.
டிசம்பர் 16 அன்று ஜோகோவிச்சிக்கு கொரோனா தொற்று உறுதியானதை அவரது குடும்பத்தினர் முன்னதாக உறுதிப்படுத்தினர்.
செய்தியாளர் சந்திப்பின் போது, டிசம்பர் 17ம் திகதி ஜோகோவிச் ஏதேனும் நிகழ்வில் கலந்துக்கொண்டாரா என நிருபர் கேள்வி எழுப்பினார்.
உடனே, இத்துடன் இந்த செய்தியாளர் சந்திப்பை முடித்துக்கொள்வதாக ஜோகோவிச்சின் சகோதரர் Djordje கூறினார், இதனையடுத்து குடும்பத்தினர் அங்கிருந்து புறப்பட்டனர்.
ஜோகோவிச், கிறிஸ்மஸ் தினத்தன்று Belgrade-ல் தெருவில் டென்னில் விளையாடியது மற்றும் டிசம்பர் 31ம் திகதி ஸ்பெயினில் பயிற்சி மேற்கொண்ட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவுஸ்திரேலிய பயண அறிவிப்பு படிவத்தில், கடந்த 14 நாட்கள் தான் வேறு எந்த நாட்டிற்கும் பயணிக்கவில்லை என ஜோகோவிச் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஜோக்கோவிச்சின் பயண விவரம் குறித்த கேள்விக்கு குடும்பத்தினர் பதிலளிக்காமல் புறக்கணித்து சென்றது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.