பிரித்தானியாவின் எரிபொருள் தட்டுப்பாடு: மக்கள் பீதியடைவதை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள்!
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பீதியடைவதை கட்டுக்குள் கொண்டுவர பிரித்தானியாவில் போட்டி சட்டத்தை அரசாங்கம் இடைநிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
பிரித்தானியாவில் HGV டிரைவர்களின் பற்றாக்குறையால் பெட்ரோல் விநியோகத்தின் நிலைமை மோசமடைந்து வருகிறது.
இதனால் நாட்டில் மிகப்பெரிய எரிபொருள் தட்டுப்பாடு நிகழும் என்ற அச்சத்தில் மக்கள் அனைவரும் தங்கள் வாகனங்கள் மட்டுமின்றி, கூடுதல் கேன்களில் எரிபொருளை நிரப்பிக்கொண்டு இருக்கின்றனர்.
இதனால், பெரும்பாலான நிலையங்களில் எரிபொருள் தீர்ந்தது. இதனால் மேலும் பீதியடைந்த மக்கள், கிடைக்கிற எல்லா எரிபொருள் நிலையங்களுக்கும் முந்திக்கொண்டு பெட்ரோலை நிரப்பி வருகின்றனர்.
எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுக்குள் கொண்டுவர பல நடவடிக்கைளை அரசு எடுத்துவந்தாலும், இந்த சூழ்நிலையை சமாளிப்பதற்காக, மக்களின் மீதியை குறைக்க அரசாங்கம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
அதாவது, பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் விநியோகத்தை இலக்கு வைக்க எண்ணெய் நிறுவனங்களை அனுமதிக்கும் 'போட்டி சட்டத்தை' (Competition Law) அரசாங்கம் இடைநிறுத்த உள்ளது.
இந்த நடவடிக்கையானது, எரிபொருள் நிறுவனங்கள் தகவல்களைப் பகிர்வதை எளிதாக்கும் மற்றும் நாட்டின் மிகவும் தேவைப்படும் பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், ஒரு படி மேலே சென்று, எரிபொருளை விநியோகம் செய்ய இராணுவத்தை பயன்படுத்த அமைச்சர்கள் திட்டமிட்டுவருவதாக தெரியவந்துள்ளது.