G 20 உச்சி மாநாடு... சில சுவாரஸ்ய தகவல்கள்
இந்திய தலைநகர் புதுடெல்லியில், இந்த வார இறுதியில், அதாவது செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் G 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
இந்நிலையில், G 20 குறித்து சில சுவாரஸ்ய தகவல்களைக் காணலாம்.
G 20 என்றால் என்ன?
G 20 என்பது The Group of 20 என்பதன் சுருக்கமேயாகும். அந்த அமைப்பின் கீழ் 19 நாடுகள் உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தையும் சேர்த்தால் எண்ணிக்கை 20 ஆகிறது.
அர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, ஐக்கிய ராஜ்ஜியம், அமெரிக்கா, ஆகிய நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியம் இணைந்த பொருளாதார கூட்டமைப்பே G 20 ஆகும்.
உக்ரைனுக்கு அழைப்பு இல்லை
40 உலக நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. G 20 நாடுகளின் தலைவர்களுடன், சிறப்பு விருந்தினர்களாகவும் பலர் அழைக்கப்பட்டுள்ளனர்.
மாநாட்டில் உக்ரைன் ரஷ்யப் போர் முக்கிய இடம் வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், உக்ரைன் ஜனாதிபதியான ஜெலன்ஸ்கி மாநாட்டில் பங்கேற்கவில்லை. காரணம், உக்ரைன் G 20 நாடு அல்ல.
அத்துடன், ஜெலன்ஸ்கிக்கு சிறப்பு விருந்தினராகவும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அதற்கு மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் காரணம் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |