போரில் ரஷ்யாவிற்கு உதவும் நாடுகள் கடும் விளைவை சந்திக்க வேண்டியிருக்கும்:ஜி-7 நாடுகள் எச்சரிக்கை
உக்ரைன் போருக்கு ஆதரவு தெரிவிப்போருக்கு எதிராக தொடர்ந்து நாங்கள் நடவடிக்கைகளை எடுப்போம் என ஜி-7 நாடுகள் கலந்து கொண்ட மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜி-7 நாடுகள் எச்சரிக்கை
உக்ரைன் போரில் ரசாயனம், உயிரி ஆயுதங்கள் மற்றும் அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் கடுமையான விளைவுகளை ரஷ்யா சந்திக்க வேண்டி இருக்கும் என்று ஜி-7 நாடுகள் கூட்டாக எச்சரிக்கை விடுத்து உள்ளன.
@et
ஜப்பான் நாட்டில் கரூய்ஜவா நகரில் ஜி-7 நாடுகளை சேர்ந்த வெளியுறவு மந்திரிகள் கலந்து கொண்ட 2 நாள் மாநாடு நடந்தது. இதில் ஜி-7 உறுப்பு நாடுகளான இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் முக்கிய தலைவர்களுடன் ஐரோப்பிய யூனியன் அமைப்பும் கூட்டத்தில் பங்கேற்றன.
@TAR
இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன் பின்னர் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.
போரில் விதிமீறல்
சமீபத்தில், பெலாரஸ் நாட்டு எல்லை அருகே அணு ஆயுதங்களை குவிக்க ரஷ்யா முடிவு செய்து உள்ளது என தகவல் வெளியானது.
@reuters
ரஷ்ய தூதர் வெளியிட்ட இந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. ரஷ்ய அதிபரும் அதனை மேற்கோள் காட்டி பேசி இருந்தது உலக நாடுகள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது.
உக்ரைன் மீது நடத்தப்படும் போரானது ஒரு தீவிர சர்வதேச சட்ட விதிமீறலை ஏற்படுத்தி உள்ளது என குறிப்பிட்டதுடன், உக்ரைனில் இருந்து உடனடியாகவும், நிபந்தனையின்றியும் அனைத்து படைகள் மற்றும் தளவாடங்களை ரஷ்யா திரும்ப பெற வேண்டும் என மீண்டும் வலியுறுத்தி உள்ளது.
@ap
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கும் 3-வது நாட்டினை தடுக்கும் வகையில் நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
உக்ரைன் போருக்கு ஆதரவு தெரிவிப்போருக்கு எதிராக தொடர்ந்து நாங்கள் நடவடிக்கைகளை எடுப்போம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.