படுக்கையறையில் அள்ள அள்ள வந்த பண நோட்டுகள்! தலைசுற்றவைக்கும் புகைப்படங்கள்
படுக்கையறையில் அள்ள அள்ள கிடைத்த ரூபாய் நோட்டுகள்.
அதிர்ச்சியில் உறைந்து போன அதிகாரிகள்.
இந்தியாவில் தொழிலதிபர் வீட்டு படுக்கையறையில் அள்ள அள்ள ரூபாய் நோட்டுகள் கிடைத்த சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்தது.
மேற்கு வங்கத்தில் மொபைல் கேம் செயலி ஒன்றை கொண்டு பண மோசடி நடைபெறுவதாக பெடரல் வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் அவர்களுடன் சேர்ந்து அமலாக்கதுறையினர் புகாருக்கு ஆளான தொழிலதிபர் அமீர்கானுக்கு சொந்தமான 6 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் படுக்கையறையில் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை கைப்பற்றினர்.
timesnowhindi
அதில் மொத்தம் ரூ 17 கோடி இருந்தது, பலத்த பாதுகாப்புடன் அந்த பணம் எடுத்து செல்லப்பட்டது.
சீன கட்டுபாட்டில் உள்ள செயலி நிறுவனங்களுடன் இவருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.