மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை - பின்னணி என்ன?
மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுளளது.
காந்தியின் கொள்ளு பேத்தி
மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தியான ஆஷிஷ் லதா ராம்கோபின் சர்வதேச வன்முறையற்ற மையத்திற்கான அரசு சாரா நிறுவனத்தில் பங்கேற்பு மேம்பாட்டு முயற்சியின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தார்.
தென் ஆப்பிரிக்காவில் வசித்து வந்த இவர், காந்தியின் மற்ற வாரிசுகள் போல் மனித உரிமை ஆர்வலராக அறியப்பட்டார்.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் உள்ள நியூ ஆப்ரிக்கா அலையன்ஸ்’ என்ற நிறுவனத்தின் இயக்குனர் மகாராஜ் என்பவரிடம் ரூ.3.22 கோடி பணம் கடனாக பெற்றுள்ளார்.
பண மோசடி
தென்ஆப்பிரிக்காவில் உள்ள மருத்துவமனைக்கு இந்தியாவில் இருந்து 3 கன்டெய்னர்களில் துணிகள் இறக்குமதி செய்துள்ளதாகவும், அதற்கு வரி செலுத்த பணம் தேவைப்படுவதாக கூறி இந்த கடனை பெற்றுள்ளார். மேலும், அதற்கான ரசீதுகளையும் வழங்கியுள்ளார்.
அதன் பின்னர் ஆஷிஷ் லதா அந்த பணத்தை திரும்ப அளிக்கவில்லை. மேலும் அவர் வழங்கிய ரசீதுகளும் போலி என தெரிய வந்தது. இதனையடுத்து, ஆசிஷ் லதா மீது மகாராஜ் பண மோசடி புகார் அளித்தார்.
இந்த வழக்கை விசாரித்த டர்பன் நீதிமன்றம் ஆசிஷ் லதாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. ஆசிஷ் லதா தற்போது ரூ.2.40 லட்சம் பிணைத் தொகை செலுத்தி ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
ஆசிஷ் லதா ராம்கோபின் தாய் எலா காந்தி தென் ஆப்பிரிக்காவின் பிரபல அரசியவாதி ஆவார். இவர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மேவா ராம்கோபினை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து பெற்றார். எலா காந்தி காந்தியின் 2வது மகனான மணிலால் காந்தி என்பவரின் மகள் ஆவார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |