தென் ஆப்பிரிக்காவில் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி 7 ஆண்டுகள் சிறையில் அடைப்பு! ஏதற்காக?
தென் ஆப்பிரிக்காவில் மோசடி செய்ததற்காக மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி 7 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆறு மில்லியன் தென் ஆப்பிரிக்க ரேண்ட் மோசடி மற்றும் போலி ஆவணம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மகாத்மா காந்தியின் 56 வயது கொள்ளுப் பேத்தி Ashish Lata Ramgobin-க்கு டர்பன் நீதிமன்றம் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
போலி ஆவணங்களை தயாரித்து இந்தியாவிலிருந்து சுங்க வரி இல்லாமல் சரக்கை இறக்குமதி செய்து தருவதாக தொழிலதிபர் எஸ்.ஆர்.மஹாராஜை ஏமாற்றி சுமார் 6 மில்லியன் தென் ஆப்பரிக்க ரேண்ட் பெற்று மோசடி செய்துள்ளார் Ashish Lata Ramgobin.
பின்னர், இக்குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை 2015 முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திங்கட்கிழமை Ashish Lata Ramgobin-ஐ குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இதனையடுத்து, Ashish Lata Ramgobin சிறையில் அடைக்கப்பட்டார்.
பிரபல மனித உரிமை ஆர்வலர்கள் எலா காந்தி மற்றும் மறைந்த மேவா ராம்கோபிந்தின் மகள் Lata Ramgobin, டர்பன் சிறப்பு வணிக குற்றவியல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தண்டனைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மறுத்துவிட்டார்.