இந்திய ரூபாய் நோட்டுகளில் விநாயகர் மற்றும் லட்சுமி படங்கள்: டெல்லி முதலமைச்சர் வேண்டுகோள்
இந்திய ரூபாய் நோட்டுகளில் விநாயகர் மற்றும் லட்சுமி புகைப்படங்களை அச்சிட வேண்டும்.
கடவுளின் ஆசீர்வாதம் நமக்கு தேவைப்படுகிறது என டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கருத்து.
இந்திய ரூபாய் நோட்டுகளில் விநாயகர் மற்றும் லட்சுமி புகைப்படங்களை அச்சிட வேண்டும் என இந்திய மத்திய அரசுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவின் இனி புதிதாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் புகைப்படத்துடன் சேர்த்து விநாயகர் மற்றும் லட்சுமி தேவியின் புகைப்படங்களையும் அச்சிட வேண்டும் என மத்திய அரசுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை வைத்துள்ளார்.
I appeal to the central govt & the PM to put the photo of Shri Ganesh Ji & Shri Laxmi Ji, along with Gandhi Ji's photo on our fresh currency notes, says Delhi CM & AAP national convenor Arvind Kejriwal pic.twitter.com/t0AWliDn75
— ANI (@ANI) October 26, 2022
நாட்டின் பொருளாதார நிலையை சீர்படுத்த மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கை உடன் சேர்த்து, இந்த விநாயகர் மற்றும் லட்சுமி தேவியின் புகைப்படங்களை சேர்க்கும் திருத்தமும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஏனென்றால் கடவுளின் ஆசிர்வாதமும் நமக்கு தேவைப்படுகிறது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: ரிஷி சுனக் பிரதமரான சில மணிநேரங்களில்…பிரித்தானியாவில் அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அமைச்சர்கள்
இதற்கிடையில் தீபாவளிக்கு டெல்லியில் பட்டாசுகள் வெடிக்க தடை விதித்து விட்டு, தற்போது ரூபாய் நோட்டுகளில் விநாயகர் மற்றும் லட்சுமி புகைப்படங்களை அச்சிட வேண்டும் என தெரிவிப்பது தேர்தலுக்கான சாகசம் என பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.