ரிஷி சுனக் பிரதமரான சில மணிநேரங்களில்…பிரித்தானியாவில் அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அமைச்சர்கள்
புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றதை தொடர்ந்து, பிராண்டன் லூயிஸ் மற்றும் ஜேக்கப் ரீஸ்-மோ ராஜினாமா.
பிரதமர் ரிஷி சுனக்கிற்கு பின்வரிசையில் நின்று ஆதரவு தெரிவிப்பேன்.
பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றதை தொடர்ந்து, நீதித்துறை செயலாளர் பிராண்டன் லூயிஸ் மற்றும் வணிக செயலாளர் ஜேக்கப் ரீஸ்-மோக் இருவரும் பதவியில் இருந்து விலகியுள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக லிஸ் டிரஸ் பிரதமர் பதவியிலிருந்து விலகியதை தொடர்ந்து, அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்க கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் நடைபெற்ற போட்டியில் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் 200 டோரி எம்.பிக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றார்.
இதனை தொடர்ந்து இன்று மன்னர் மூன்றாம் சார்லஸால் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு ரிஷி சுனக் அழைக்கப்பட்டு முறைப்படி அரசாங்கத்தை அமைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.
இந்நிலையில் பிரித்தானியாவின் பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றதை தொடர்ந்து, நீதித்துறை செயலாளர் பிராண்டன் லூயிஸ் மற்றும் வணிக செயலாளர் ஜேக்கப் ரீஸ்-மோக் இருவரும் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
போரிஸ் ஜான்சன் மற்றும் லிஸ் ட்ரஸ் இருவரின் நெருங்கிய கூட்டாளியான வணிக செயலாளர் ஜேக்கப் ரீஸ்-மோக் ரிஷி சுனக்கின் அமைச்சரவையில் பணியாற்ற எதிர்பார்க்கவில்லை என முன்பே தெரிவித்து இருந்தார்.
An honour to have been one of the longest serving Cabinet ministers - having done eight ministerial roles, in five departments, under four Prime Ministers.
— Brandon Lewis (@BrandonLewis) October 25, 2022
The new PM will have my support from the back benches to tackle the many challenges we face - as a Party and as a country. pic.twitter.com/ulZjpcHkWk
நீதித்துறை செயலாளரான பிராண்டன் லூயிஸ் தனது ராஜினாமா கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: லிஸ் டிரஸ் தவறுகளை சரி செய்யவே நான் வந்துள்ளேன்: பிரதமராக முதல் உரையில் ரிஷி சுனக் அறிவிப்பு
அதில் நாட்டின் புதிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார், மேலும் நாங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதிலும், எங்கள் கட்சியை ஒன்றிணைப்பதிலும், 2019 தேர்தல் அறிக்கையில் நாங்கள் முன்வைத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு பின் வரிசையில் நின்று ஆதரவு தெரிவிப்பேன் என தெரிவித்துள்ளார்.