கருணைக்கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் கடைசி ஆசை
ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணொருவர் கருணைக்கொலை செய்யப்பட ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றமும் ஸ்பெயின் அரசியல் சாசன நீதிமன்றமும் அனுமதியளித்துள்ளதைத் தொடர்ந்து, நேற்றிரவு அவர் கருணைக்கொலை செய்யப்பட்டார்.
கருணைக்கொலை செய்யப்பட்ட இளம்பெண்
ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனாவைச் சேர்ந்தவர் ராமோஸ் (Noelia Castillo Ramos, 25) என்னும் இளம்பெண்.
Tik Tok
அரசு காப்பகம் ஒன்றில் தங்கியிருந்த ராமோஸ், 2022ஆம் ஆண்டு கூட்டு வன்கொடுமைக்கு ஆளானார்.
தனக்கு நேர்ந்த பயங்கரம் குறித்து தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்திருந்த ராமோஸ், தன் பெற்றோர்கள் தன்னைக் கவனித்துக்கொள்ளாததால், 13 வயதில், தான் அரசு காப்பகம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
காப்பகத்திலிருக்கும்போது, தான் பலமுறை வன்புணரப்பட்டதாக தெரிவித்த ராமோஸ், கடைசியாக, தான் தனது பதின்மவயதுகளிலிருக்கும்போது, மூன்று பேர் தன்னை கொடூரமாக கூட்டு வன்புணர்வு செய்ததாக தெரிவித்துள்ளார்.
அதனால் கடும் மன பாதிப்புக்குள்ளான அவர் தன் உயிரை மாய்த்துக்கொள்வதற்காக கட்டிடம் ஒன்றிலிருந்து குதிக்க, அவர் உயிர் பிழைத்துவிட்டார், ஆனால், அவரது உடல், இடுப்புக்குக் கீழே செயலிழந்துவிட்டது.
பல ஆண்டுகளாக கடும் மனவேதனையும் உடல் வேதனையும் அனுபவித்துவந்த ராமோஸ், கருணைக்கொலை செய்யப்பட அனுமதி கோரினார்.
2024ஆம் ஆண்டு அவர் கருணைக்கொலை செய்யப்பட இருந்த நிலையில், ராமோஸின் தந்தை தன் மகள் தன் உயிரை மாய்த்துக்கொள்வதற்கெதிராக வழக்குத் தொடர, ராமோஸின் ஆசை நிறைவேறாமல் போய்விட்டது.
Tik Tok
இந்நிலையில், ராமோஸின் கோரிக்கையை ஏற்று அவர் கருணைக்கொலை செய்யப்பட ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றமும் ஸ்பெயின் அரசியல் சாசன நீதிமன்றமும் அனுமதியளித்தன.
அதைத் தொடர்ந்து, நேற்றிரவு ராமோஸ் கருணைக்கொலை செய்யப்பட்டதாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கடைசி ஆசை
கடைசியாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ராமோஸ், என் குடும்பத்தில் யாருமே எனது கருணைக்கொலைக்கு ஆதரவாக இல்லை. காரணம், நான் என் குடும்பத்தின் தூண்களில் ஒன்றாக உள்ளதுதான். ஆனாலும், நான் போகிறேன், நீங்கள் வேதனையுடன் வாழப்போகிறீர்கள்.
ஆனால் யோசித்துப்பாருங்கள், நான் இத்தனை வருடங்களாக அனுபவித்த வேதனையை எண்ணும்போது, நான் என் பாடுகள் நீங்க அமைதியாக கடந்துபோகவே விரும்புகிறேன், அவ்வளவுதான் என்று கூறியிருந்தார்.
ஆக, தனது கடைசி ஆசையிலும், தான் மரணமடையும்போது, தன் தந்தை தன்னுடன் இருக்கக்கூடாது என்று கோரியிருந்தார் ராமோஸ்.
Tik Tok
அவர் என்னிடம் தொலைபேசி வாயிலாக பேசுவதோ, கடிதம் எழுதுவதோ கிடையாது, அப்படியிருக்கும்போது, நான் உயிருடன் இருக்கவேண்டும் என அவர் ஏன் விரும்புகிறார் என கேட்டிருந்தார் ராமோஸ்.
மேலும், தான் மரணமடையும்போது, தனக்கு அழகான உடை அணிவிக்கப்படவேண்டும் என்றும், மேக் அப் இடப்பட்டவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார் ராமோஸ்.
யாரோ சிலருடைய அத்துமீறல், அலட்சியம் காரணமாக, வாழவேண்டிய வயதில் இந்த உலகை விட்டுப் பிரிந்துபோய்விட்டார் ராமோஸ்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |