ஐசிசி தலைவராக இந்திய ஜாம்பவான் நியமனம்!
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஐசிசி கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக அனில் கும்ப்ளேவிற்கு பதிலாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பதவியேற்றார் என்று ஐசிசி நிர்வாக குழு புதன்கிழமை உறுதிப்படுத்தியது.
2012ல் பொறுப்பேற்ற கும்ப்ளே, மூன்று முறை தனித்தனியாக மூன்றாண்டுகள் என சுமார் 9 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார்.
இதுகுறித்து ஐசிசி தலைவர் Greg Barclay கூறியதாவது, ஐசிசி ஆடவர் கிரிக்கெட் கமிட்டியின் தலைவர் பதவிக்கு கங்குலியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
கங்குலி, உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராகவும், பின்னர் நிர்வாகியாகவும் இருந்த அனுபவம், நமது கிரிக்கெட் முடிவுகளை கட்டமைத்து முன்னோக்கி வழிநடத்துவதற்கு உதவும் என்று கூறினார்.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் அனிலின் சிறந்த தலைமைத்துவத்திற்காக நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
டிஆர்எஸ் மற்றும் சந்தேகத்திற்கிடமான பந்துவீச்சு நடவடிக்கைகளை நிவர்த்தி செய்வதற்கான வலுவான செயல்முறையின் மூலம் சர்வதேச விளையாட்டை மேம்படுத்தியதில் அனில் கும்ப்ளேவின் தலைமைத்துவம் அடங்கும் என Greg Barclay கூறினார்.